லக்கினத்தில் சூரியன்

லக்கினத்தில் சூரியன்

 நாம் இந்த பூமியில் வாழ்வதற்கேற்ற பிரதான காரணமாக விளங்கும் சூரியன் லட்சக்ணக்கான வின் மீன்களில் ஒன்றாகும். சூரியன் இல்லையென்றால் உயிரினங்கள் இல்லை .
 சூரியனே ஆத்ம காரகராவார், ஜுவனுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் கிரகமாவார். உடல் உறுப்புக்கும் கருவுற்ற தாய்க்கு மகப்பேற்றின் போது உநவும் கிரகமாக உள்ளர்.
ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனை நைசர்கீய பாவி அல்லது அசுபன் என்றே வரையத்துள்ளனர், பெதுவாக.வே பாவியெனக் கருதப்படும் சூரியன் எல்லா லக்கினங்களுக்குமே தீய பலன்களை தருவதில்லை.
 நவகிரகங்களில் முதன்மையானவர். அனைவருக்கும் ஒளியை அளிக்கக்கூடியவர். சூரியனை மையமாக கொண்டே அனைத்து நவகிரகங்களும் இயங்குகின்றன. சூரியன் பற்றிய பல தகவல்களையும் நவகிரகம் என்னும் தொடர் மூலம் நாம் அறிந்தோம். இனி சூரியன் ஒவ்வொரு ராசிகளில் செயல் படுத்தும் செயல்கள் மற்றும் அவரால் ஏற்படும் பலன் பற்றி நாம் காண்போம்.
லக்கினத்தில்  சூரியன் இருந்தால் ;
தன் பங்கு தாவென்று சபையேறும் தம்பியோ சார்ந்த சன்மச்சூரியன்
லக்கினத்தில் சூரியன் இருந்தால் பங்காளிச் சண்டை ஏற்பட்டும் பாகப்பிரிவினை ஏற்படும்.
அடவுடன் குழந்தை உதித்த தோர்வீட்டில் அலரியுமிருந்தால் ஆரோக்கியன் விடுவது
மில்லை
பயித்திய ரோகி லக்கின மேஷத்தில் கடத்தில் கன்னுக்கு ஊனம் கடும்பகை              சிம்மத்தில் திடமிலாது லக்கினமாகில் தெளிவிலான் திருவில்லா திகைப்பான்
(இ-ள்) லக்கினத்தில் சூரியன் ஆரோக்கியம் நலமுடன் இருக்கும்.மன நிலை பாதிப்படையும். மேஷச,கடக லக்கினத்தில் சூரியன் இருந்தால் கண்களில் பாதிப்படையும். சூரியன்        சிம்ம லக்கினத்தில் உறுதியில்லாதவர்கள்,தெளிவிலான் யோசனை குறையும்.
     லக்கினத்தில் சூரியன் இருந்தால் ஜாதகர் ஜாதகியர் தகுதி திறமைக்கு ஏற்ப உயர்ந்து விடுவர்கள் லக்கினத்திற்கு எந்ததெந்த பாவகாதிபதியாக இருக்கின்றாரோ அந்த பாவ காராகத்துக்கு ஏற்ப்ப பலன்களை அடைவர்கள் வாழ்வில் முன்னேற்றங்கள் ஆடையப் பல்வேறு வகைகளில் தடங்கல்கள் சிரமங்களை சந்திக்கவேண்டும்.
 ஜாதகர்/ஜாதகியர் முரட்டு சுபாவமும், வஞ்சனையும்,பொறமையும்,மூன் கோபமும் , ஈவு, தயவு தாட்சண்யம் இருக்காது,பதவி, பட்டம்,அதிகாரம், புகழ் கிட்டும்,ஆனால் நெருங்கிப் பழகப் பயப்படுவர்கள்.கண் பார்வையில் கோளறு ஏற்படும்,அலைச்சல், துணைவிக்கு பீடை,பூர்வீக சொத்து விரயம்,வறுமையும், துணைவர்களால் அவமானப்படுவர்கள். அறுசுவைப் பிரியர்கள்,பெரியோர்களை மதிப்பார்கள், பகலில் போகம் செய்வர்கள்,வாழ் நாள் முழுவதும் கௌரவம்,புகழ் மேம்படத் துணைசெய்யும்,சிறு சிறு நோய்கள் ஏற்படும் .சதா மன உளைச்சல்களுக்கு ஆட்படுவர்கள் ,மார் வலி,வயிற்றுவலி,காய்ச்சல், பித்த நோய்கள் ஏற்றம்.
  பெண்கள் ஜாதகத்தில் லக்கினத்தில் சூரியன் இருந்தால், கண்டிப்பும்,கற்றார் பேர்வழிகள், அதிக நோய் பாதிப்புக்குள்ளவர்கள்,உறுதியான சுபாவமில்லாதவர்கள்,நன்றிமறப்பவர்கள், சரியான உடல் அமைப்பற்றவர்கள்,வீட்டிற்கு வெளியே திருப்தியாக உண்பதில் ஆசையுடையவர்கள்,பெறாமைக் குணமுள்ளவர்களாகவும்,தலைமுடி குறைவாக இருக்கும்.
ஜோதிடத்தில் அகங்காரத்தையும் குறிக்கும் கிரகம் சூரியன் என  தெரிவிக்கின்றன. மேலும் அகங்காரத்தையும் குறிக்கும் பாவம் லக்னபாவம் என குறிப்பிடுகிறது.
சூரியன் லக்னத்தில் ஆட்சி உச்சம் பெற்ற தன்மை அரசியல், பதவி, அதிகாரம், அந்தஸ்து ஆகியவற்றால் அகங்காரம் ஏற்படும்.
ஒருவர் ஜாதகத்தில் சூரியனது வீடு லக்னமாகவோ, ராசியாகவோ அமைந்து ஆட்சி உச்சம் பெற்றுவிட்டாலும் சூரியன் ஆத்மகாரகனாக அமைந்துவிட்டாலும் லக்னத்திற்க்கு சூரியன் பார்வை பெற்றுவிட்டாலும் அவர்களுக்கு எப்போதும் ஏதோ ஒரு அகங்காரம் இருந்துக்கொண்டே இருக்கும். ஆனால் சூரியனை குரு பார்த்துவிட்டாலும் குருவை சூரியன் பார்த்துவிட்டாலும் அகங்காரம் தகர்ந்துவிடும்.
சூரியன் எந்த கிரகத்தை சார்ந்து நிற்கிறது என்பதை பொருத்து எந்த கிரகத்தோடு சேர்க்கை பெறுகிறது என்பதை பொறுத்து அகங்காரம் அமைந்துவிடுகிறது.
மைந்தனே லக்கினத்தில் ரவியிருக்க வரும்பலனே ஒல்லியாய்ப் பின்பருப்பன்
அந்தமுடன் சூரனாம் தீரவீரன் அன்புடையன் மனதிலே கவடுடையான்
எந்தை சிற்றுண்டி சிற்ண்டத்தில் என்சொல்வேன் பிரியனாம் நிமிஷத்தில் கோபி
பந்த முள்ள நெய்யோடு காரமிச்சை பழப்பிரியன் தாம்பூல நேயனாமே
(இ-ள்) லக்கிளத்தில் சூரியன் இருந்தால் உடல் ஒல்லியாக இருப்பர்கள்,பிறகு உடல் பருமன் ஆகிவிடும்.சிற்றுண்டி நேய், காரம்,தாம் பூலம் அதிகம் விரும்பி உண்பர்கள்.வீரன், சூரன புகழப்படுவர்கள்.மனதில் தீய எண்ணம் உள்ளவர்கள்.ஆனால் அன்புடையவர்கள். ..
.ஆமேதான்  அறுசுவைப் பிரியனாகும் ஆசார சீலனாம் பெரியோர்க் கன்பன்
தீமையில்லாக் கருத்துமுள்ளான் தவப் பெருக்கன் தினமுழுக்குப் பிரியனாம்
                                                                                                                                          வெளியார்க்கன்பன்
தாமதங்களாகாத புத்திகூர்மை சங்கிதப் பிரியனாம் மங்கை சொத்து
நேமமுடன் கிடைத்துவிடும் அலங்காரத்தான் நேர்த்தியுடன் மஞ்சமுண்டு குருவின் பக்தி
(இ-ள்) அறு சுவை உணவுப் பிரியார்கள். ஆச்சாரங்களைப் பின்பற்றுவர்கள். பெரியோர்களை மதிப்பர்கள்.நல்ல கருத்துக்களை கூறுவர்கள்.ஞானியாவன். தினமும் நீராடப் பிரியா பிரியர்கள்ள்.வெளியார்க் அன்பர்கள் கூர்மையான புத்தியுள்ளவர்கள். சங்கீதப் பிரியர்கள். சுகபோக வாழ்வு அமையும்.

பக்தி உண்டு விசுவாசி உபகாரத்தான் பலபோர்க்கு அன்மது அளிக்குந்தீரன்
உத்தமர்கு மர்மன் பகல் போகி உண்டான ஆளடிமைப் பணிதியுள்ளான்
நித்திரையில் பிரியனாம் மங்கைக் கேற்ப நீநிலத்தில்  நடப்பவன் போற் சைகை காட்டிக்
குந்தமுள்ள பலமாது போகந் துய்ப்பான்  கூடுமாம் பலபொருளும் வலுவாய்ச் சேரும்
(இ-ள்) இறை வழிபாடும் தர்மம் செய்வர்கள் பலருக்கு உணவு அளிப்பர்கள். இவர்களின் இரகசியம் அறியமுடியாது.பகலில் சின்றின்பத்தை அனுபவிப்பர்கள். சிறந்த தொழில் வளமும் வேலையாட்களும் உள்ளவர்கள்.துங்குவதில் விருப்பம் உள்ளவர்கள். பெண்களின் சொல்படி நடப்பர்கள். பொன் பொருள் செல்வமும் சிறப்புடன் அமையும்.
ஆதித்தன் உதயம் நிற்ப அம்புலி ன்னி யாக
பேரித்துப் பாவர் கூடில் பெருகிய சலத்தால் கண்டம்
(இ-ள்) சூரியன் லக்கினத்தில் இருக்க கன்னியில் சந்திரன்பாவிகள்சேர்ந்திருக்க வெள்ளள நீரில் அபாயம் தண்ணீரில் கண்டம் ஏற்படும்.
சோதித்த உதயம் திங்கள் சுடர்நிற்க உபய மாலைக்க
சாதித்த பாவர் கூடில் சலத்தினில் மரணமாவன்
(இ-ள்) லக்கினத்தில் சூரியன் சந்திரன் சேர்ந்திருக்க  உபய ராசிகளில் ஏதாவது ஒன்றில் புதன் இருந்து பார்கள் சோர்ந்திருந்தால் தண்ணீரில் வீழ்ந்து இருப்பர்கள்.
பங்கம் பனிரெண்டு ஒன்று – அன்றுள்
பஞ்சமம் பாக்கியம் இரண்டேழில் கதிரோன்
அங்கத்தில் காந்தலுமுண்டு – சென்மன்
அதிர்ஷ்டவானாம் நித்திரை கனவுமோகாண்பன் --  சங்கர
(இ-ள்) சூரியன்  1 – 5 – 9 – 2 - 7- 12 – ல் இருந்தால் உடலில் அதிக உஷ்னம்( சுடு) இருக்கும். பல வகையில் ஆதாயம், அதிர்ஷ்டம் கிடைக்கும். துக்கத்தில்  கனவுகள் கண்பர்கள்.
கனவும் கண்ணோயும் சிரங்கு மாதே
கடுந்துஷ்டன் குலையீனர் பகையுமே யுண்டாம்
மனதில் நினைத்தது முடியும் – பூவில்
மகத்தான கதிர்நிலை யறிந்து சொல்தோழி – சங்கர
(இ-ள்)  கனவு கண்பர்கள் சிரங்கு உடலில் புண்கள் ஏற்படுத்தும்.கோபம் இருக்கும். உறவினர் பகையுணர்வு உண்டாகும்.நினைத்த காரியங்களை  எளிதில் முடிப்பர்கள்.சிறப்பக சூரியனின் பலத்தை   ஆராய்ந்து பலன்களை கூறவும்.
லக்கினத்தில் சூரியன் இருந்து திசை புத்தி நடந்தால் உடலில் உஷ்ணம்( சுடு) அதிகமாகும்.இருந்த இடம் விட்டு இடம் மாற்றம் ஏற்படும்.
சூரியன் ராகு சேர்க்கை இருந்தால் களத்திர தோஷம் ஏற்படும்.
சூரியனுக்கு 12 – சந்திரன் இருந்தால் ஐந்து,ஒன்பது வயதில் நீரினால் ஆபத்து.
மேஷ :- லக்கினத்தில் சூரியன்
 ஐந்தாம் அதிபதி இருந்தால் சிறப்பைத் தரும் மேஷ ராசியின் அதிபதியான செவ்வாயுடன், சூரியன் நட்பு கிரகமாக விளங்கூடியவர். மேலும், மேஷ ராசியில் சூரியன் உச்சம் அடைகின்றார். சூரியன் பிதுர்காரகர் ஆவார். எனவே, மேஷ ராசியில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் எதையும் முன்னின்று செய்யும் தலைமைப் பண்பு கொண்டவர்கள்
சிவந்த உடலும்,கலையழகு முகம்,சிறந்த கல்விமான், தொழில் வாய்ப்புகள் மேலும் மேலும்  முன்னேறிச் செல்ல வேண்டும். என்ற ஆசையும் திட்டமும் இல்லவர்கள்.புகழ், சொல்வக்கும் ,செல்வ வளம்,சுக போக வாழ்வும்,மனே பலம்,துணிச்சல், உயர் கல்வியும், குழந்தைகள் மூலம் ஆதரவான சூழலும், குழந்தைகளால் பெருமையும் உண்டாகும்.தந்தையால் லாபமும், தந்தைவழி ஆதரவும் வழிகாட்டுதலும் உண்டாகும் ,கண் நோய் ஏற்படும்.நல்ல உரைப்பாளியாகவும், திறமைசாலிகளாகவும்,தெய்வ பக்தியும், முன்கோப குணம் கொண்டவராகவும் ஆனால், தாம் செய்தது தவறு என்னும் அறியும் மனம்,உணர்ச்சி வசப்படுவர்கள்,சிறப்பான பலன்களைதரும். பூர்வீக சொத்துகளால் இலாபம் உண்டாகும்  எதையும் நேர்மையாக அணுக வேண்டும் என்னும் குணமுடையவர்கள்.
கணவன் மனைவிடையே தளரத ஒருவித இறுக்கம் இருக்கும். வாழ்க்கைத் துணைவரால் சுகமான பயன்பாடு இருக்கது.கலவியில் நாட்டம் கொள்ள மாட்டார்
 குருவின் பார்வை சேர்க்கை சிறப்பான யோகம் தரும்.
சூரியன் புதன் சேர்க்கை இருந்தால் ஜாதகர் / ஜாதகிக்கு தங்கள் தாய் வழி உறவினர்களால் ஆதரிக்கப் படுவர்கள்.செல்வ வளம் கிடைக்கும்.
மறியிற் பானுதயமாகில் பூமனுஞ் சுபரே பார்க்கில் புவிமன்னனாமே
மேசக்கினத்தில் சூரியன் இருக்க இவரை சுபாக் கிரகங்கள் பார்த்தால் மன்னர்களுக்கு இணையன வாழ்வு அமையும்.
சூரியனுடன் பாவிகள் தொடர்பு இருந்தாலும் அல்லது சூரியனை பாவிகள் பார்த்தால் ஜாதகருக்கு தலைமுடி அதிகம் உதிரும்.
ரிஷப :- லக்கினத்தில் சூரியன்
 நான்காம் அதிபதி  இருந்தால் சிறப்படைவர்கள் கலைகலில் ஆர்வம்,கவிஞர் ,வாசனை விரும்பிகள்,கண் தொடர்பான நோய்,தாய்ப்பாசம் உடையவர்கள், தந்தையர் செல்வ வளமுடன் இருப்பர்கள், வாகன வசதியும்,பொதுச் சேவை செய்வர்கள், திடீர் வரவும் , எதிர்பாராத சொத்து கிட்டும் ,செல்வ வளம் குறைவற இருக்கும், தொழில்களில் நன்மையும்,  தொழில் நிறைய லாபம், இல்லறத்தில் எல்லா நன்மையும் கிட்டும்,பித்த நோய் ஏற்படும்.
சிற்றின்ப சுகம் பல மடங்கு காமப் போதையைத்தருவதாக இருக்கும்.
சூரியன் சந்திரன் சேர்க்கை யோகம் தரும்.சூரியன் புதன் சேர்க்கை சிறப்பன யோகம் தரும்.
ரோகிணியில் சூரியன் இருக்க பிறந்தவர்கள் பிறருக்கு வழிகாட்டிடும் ஆசிரியர்களாக இருப்பர்கள் .
ஆதித்தன் முன்னிய மேயுதயமாகப் பொழியும் வளர் மதியிருக்கச் கூடப்பார்க்கில்
பொருந்து தனம் உடையவனம் புவியினிளங் கொடியே
  ரிஷப லக்கினமாக சூரியன் சந்திரன் சேர்ந்து இருக்க சுபகிரகங்கள் கூட அல்லது பார்த்தால்  அதிக செல்வ வளமும் உள்ளவர்கள்.
சூரியன் ராகு சேர்க்கை இருந்தால் ஜாதகர்/ஜாதகியர் குறுக்கு வழிகளிலும்,தீய செயல்களிளும் வருமானம் அடைவர்கள்.
மிதுன ;- லக்கினத்தில் சூரியன்
 மூன்றாம் அதிபதி இருந்தால் உழைத்து முன்னேறுவார்கள்  உயர்கல்வி,ஆராய்ச்சித்தின், எப்போதும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருப்பர்கள். குடும்ப வாழ்வில் சிக்கல் அதிகம், சிற்றின்ப பிரியர்கள் படுக்கையறை லீலாவினோதங்கள் மகிழ்ச்சியைத் தரும், அனைவரிடமும் அனுசரித்து போகும் சுபாவமிருக்கும், கம்பீரமான தோற்றம், சுறுசுறுப்பு அதிகாரமுள்ள உத்தியோகம், சகோதரர்களுடன் நல்ல உறவு இருக்கும். ஆண்கள் பெண்களை விரும்பி ராசிப்பர்கள்,பிறபாலர்கள் தொடர்பிருக்கும் துணைவர்களையும் நேசிக்கக் கூடியவர்கள்,வாயு தொடர்பன நோய் ஏற்படும்,அஜீரணம் ஏற்படும்.
சூரியன்,சுக்கிரன் சேர்க்கை இருந்தால் வசதியான பிறபாலர்களுடன் பழகி அவர்களின் ஆசைக்குரியவர்கள்.
கடக ;- லக்கினத்தில் சூரியன்
இரண்டாம் அதிபதி  இருந்தால் சிறப்பைத் தரும்.உடல் பொலிவுடன் இருக்கும். போதுமான வதிகள் இருக்கும். அதிக அவறிவாற்றல் சரீரங்களில் புண்கள் ஏற்படும்,ஆணவம் மிக்கவர்கள், சந்தேகப் படுவர்கள், மனைவி சொல் கோட்பர்கள், செந்த பந்தகளுடன் உண்மையாக நடந்து கொள்ள மாட்டர்கள் ,வாழ்க்கைத்துணையை சந்தேகிப்பர்கள்,வாழ்கைத் துணைவரால் நன்மை இல்லை, சகல வதிகள் கிட்டும் . சம்பாதிக்கும் திறைமையுள்ளவர்கள்,சுயதொழில் செய்து லாபம்அடைவர்கள்,,காம உணர்வு அதிகம் உள்ளவர்கள், செலவுகள் அதிகம் செய்வர்கள்.இருதயம், கண் சம்பந்தமான நோய்கள் ஏற்படும்.
சந்திரனின் அல்லது குருவின் சேர்க்கை அல்லது பார்வை இருந்தால் ஜாதகர்/ஜாதகியர் புகழ் செல்வாக்கு கிடைக்கும்.
சனியின் சேர்க்கை அல்லது பார்வையிருப்பின் பிறருடைய செயல்களில் தலையிட்டு வீணாடிப்பர்கள்,நல்ல காரியங்களில் தடைகள் ஏற்படுத்தும்.
பூசம் நட்சத்திரத்தில் சூரியன் இருக்கப் பிறந்தவர்கள் பிறருக்கு வழிகாட்டும் ஆசிரியனாக இருப்பர்கள்.
ஏயுஞெண்டுதிப்ப ராகும் இரவியும் கூடிநின்றால்
சாயுறு களத்தி ரத்தால் தனநாசம் அவமானதான்
(இ-ல்) கடக லக்கினத்தில் சூரியன் ராகு சேர்ந்திருந்தால் ஜாதகர்/ஜாதகியர் துணைவர்களால் செல்வம் பாதிக்கப்படும்.அவமானம் ஏற்படும்.
சிம்ம ;- லக்கினத்தில் சூரியன்
லக்கினாதிபதி லக்கினத்தில்  இருந்தால் சிறப்பு எழில் மிக்க எடுப்பான தோற்றம்,செய்வன திருந்த செய்வர்,தன் எண்ணத்தால்,செயலால், சொல்லால், பலருக்கு நல்வாழ்வு தருவர்கள், அனைவரிடம் அன்புடன் இருப்பர்கள்.வீண் கவலை தவிர்ப்பர்கள், தலைமைப் பதவி,அரசுப் பனி ,திடீர் அதிர்ஷ்டம், உயர் நிலை ஏற்படும் ,சுகமான வாழ்வும்,பயனங்களில் ஆர்வம், கூர்மையான சிந்தனைவதி, நேர்மையனவர்கள் ,தன் தோற்றத்தினால் பிறரை ஈர்த்து கொள்வர்கள், அளவுடன் பேசக்கூடியவர்கள், கடமை, ண்ணியம்,கட்டுபாடு உள்ளவர்கள்.குடும்பப் பொறுப்பு ஏற்க்க மாட்டர்.படுக்கையறை வேப்பங்காயாக கசக்கும்.
சூரியன் செவ்வாய் சேர்ந்திருந்தால் ஜாதகர் / ஜாதகிக்கு சிறப்பன பணி, வேலை,பதவி, தொழில் அமைய வாய்புகள் ஏற்படும்.
 குரு,செவ்வாய்,பார்வை சேர்க்கை இருந்தால் வாழ்வில் அனைத்து சுகபோக வாழ்வு அமையும், புகழ்கிட்டும், இளநரை முடி உதிரும்,வழுக்கை தலை,கண் பாதிப்பு ஏற்படும்.
எடுத்தசிங்கம் உதயமாய் இரவிமதி கூடி
சிம்ம லக்கினத்தில் சூரியன் சந்திரன் சேர்ந்திருந்தால் மலைக்கண் நோய் ஏற்படும்.
சூரியனுடன் பாவிகள் தொடர்பு இருந்தாலும் அல்லது சூரியனை பாவிகள் பார்த்தால் ஜாதகருக்கு தலைமுடி அதிகம் உதிரும்.
கன்னி லக்கினத்தில் சூரியன்
 பன்னிரண்டாம் அதிபதி லக்கினத்தில்  இருந்தால் பாதிப்பு ஏற்படும்,அடிக்கடி பாதையை மாற்றிக் கொள்வார், நஷ்டம் ஏற்படும்,உதவிக்கு யாரும் இருக்க மட்டர்கள், அதிக பெண் குழந்தை கிட்டும்.இல்லறத்தில் வீண்வாதம் ஏற்படும், அகந்தையும்,இறுமாப்பு இருக்கும், துணைவர்களை இழப்பர்கள், கலையார்வம், ஏழுத்தாற்றல் உள்ளவர்கள், அறிவுக் கூர்மையுள்ளவர்கள் ,எல்லோரிடமும் ,,நன்றி உணர்வு இல்லாதவர்கள்,நல்ல வாய்புகளை இழப்பர்கள், சம்பாத்தியக்காரர்கள் என்றாலும், தன்னுடைய அலட்சியத்தால் தொழிலில் பல பிரச்சனைகள், செலவுகள் அதிகம், ஏற்படும்.அவனைவரிடமும் சிடு என எரிந்து விழவர்கள், பித்தம் அஜீரணம், குடல் புண்,வாயுக் கோளறுகள் ஏற்படும்.
குரு,புதன்  சேர்க்கை அல்லது பார்வை இருந்தால் வாழ்வில் சிறப்படைவர்கள்.
சூரியன் சந்திரன் சேர்க்கை  இருந்தால் உறவு,நட்புக்களால் கஷ்டம், ஊரைவிட்டு  வெளியூரில் வாழ்வர்கள்.
சூரியன் சுக்கிரன் சேர்க்கை அதித உணர்வால் சிறப்படைவர்கள்.செல்வ வளம் மிக்க பிறபாலர்களுடன் தொடர்பு ஏற்படும்.
துலா ;- லக்கினத்தில் சூரியன்
பதினொன்றாம் அதிபதி லக்கினத்தில் இருந்தால் சிறப்பு தன் ஆனால் சர லக்கினத்திற்கு பாதகதிபதி சூரியன் இருந்தால் நிதிப் பற்றாக்குறை இருந்து கொண்டேயிருக்கும். உடல் பலவீனகா இருக்கும்,கல்வி அறிவு குறைவு, கலையர்வாம், விசேஷ பண்புகள் சில உண்டு, உடல் உஷ்ண ஆதிக்கம், பழிவாங்கும் எண்ணம்,தந்தையின் ஆரோக்கியம் பாதிக்கும்.துணைவர்களால், குழந்தைகளால் நன்மையிருக்காது.சுக வாழ்வுக்கு பங்கம் ஏற்படும்.முன் கோபமுடையவர்கள்.நரம்புகளை வலுவிழக்கும்,உஷ்ணம் தொடர்பன நோய்கள்,மூல நோய்கள் ஏற்படும்.கடல் பொங்குவதைப் போல்காமம்பொங்கும்.
துலாம் லக்கினத்தில் சூரியன் இருந்தால் ஜாதகரின் வாழ்க்கைகைத் துணையுடனான திருமணம் வாழ்வில் பெயரளவிற்கே என்ற வகையில் அமைந்துவிடும்.
துலை யென்ற லக்கினத்தில் தோன்று சிறுபாலனுக்கு
மலை போலே சூரியனும் படுபாவி நலங்குரைக்கும்
அவன்திசை யாறுக்குள் ஐஸ்வரிய மீந்தாலும்
அவனையும் கொன்றிடுவன் அண்ணலவன் துன்பமொடு
அன்பதுக்கு மேலே அலரிதிசை வந்திடிலோ
துன்பமில்லை துணிந்திருப்பன் வையகத்தில்
சையோக வாலிபத்தில் சூரியதிசை வந்துவிடில்
குய்ய தந்திரம் செய்தாலும் கேழ்ப்பானோ கூறும்கோவிந்த ராஜனையும் குமரனையும்  தான் தொழவே மேவ ஆவலுடன் பூசை செய்தால் வலுக் குறையும்

    (இ-ள்)   துலாம் லக்கினத்தில் பிறந்தவர்களுக்கு சூரியன்  பாவி.சூரியன் தசை ஆறுவருடமும் செல்வ வளம் தந்தால், ஆயுளை பங்கப்படுத்தி விடுவார்.தந்தைக்கு துண்பத்தை தருவார்.
 ஐம்பது வயதிற்கு மேல் சூரியன் தசை நடமுறைக்கு வந்தால், துண்பம் இல்லை ஆயுள் பலமுடன் உலகில் வாழ்வர்கள்.
 வாலிபத்தில் சூரியன் தசை வந்தால் நோய் பாதிப்பு ஏற்படும்.முறையாக, கோவிந்தராஜனையும், முருகக்கடவுளையும் பூஜை செய்து வந்தால் துண்பம் குறையும்.
விருச்சிக ;- லக்கினத்தில் சூரியன்
 பத்தாம் அதிபதி லக்கினத்தில்  இருந்தால் தர்ம குணம்,பிறருக்கு உதவி செய்வர்கள்.தந்தையின் அன்பும் ஆதரவும் கிட்டும்,பல வளர்ச்சியை நோக்கி செல்வர்கள்  தன்னல மற்றவர்கள்,உடல் மனம்,பலமுடன் உள்ளவர்கள்,அரசு வகையில், ஆதாயம் கிட்டும்,முன் கோபி,கஷ்டப்பட்டு உயர் நிலை அடைவர்கள்,ஆன் மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள்,முரட்டு சுபாவம்,பிடிவாத முள்ளவர்கள்,தொழில் வளம், அரசியல் அதிகார பதவிகள் கிட்டும்.ஆனால் துணைவர்களால் போதிய இன்பம் கிடைக்காது, பாலியல் உணர்வுகள் அதிகம்,ஆடம்பரப்பிரியர்கள்,உல்லாச விரும்பிகள்.
சூரியன் குரு செவ்வாய் சேர்க்கை வசதியான வாழ்வும் யோகம் கிட்டும்.
சூரியன் சுக்கிரன் சேர்க்கை வசதியான பிறபாலர்களுன் பழகி அவர்களின் ஆசைக்குரியவர்களாக இருப்பர்கள்.
சூரியனுடன் பாவிகள் தொடர்பு இருந்தாலும் அல்லது சூரியனை பாவிகள் பார்த்தால் ஜாதகருக்கு தலைமுடி அதிகம் உதிரும்.
தனுர்:-  லக்கினத்தில்  சூரியன்
ஒன்பதாம்  அதிபதி லக்கினத்தில்  இருந்தால் தன்னால் முடிந்த வரை தன தர்மங்கள் செய்வார், பெருமை புகழ் கிட்டும், தந்தையின் அன்பும் ஆதரவு கிட்டும்,செவ்வவம்,புகழ் செல்வாக்கும் கிட்டும் ,ஆன்மீகத்துறையில் அதிக ஈடுபாடும், அரசுவகையில் சன்மானம், சம்பாதிக்கும் திறமையுள்ளவர்கள், மனைவி, மக்களால் ஆதாயம்,கிட்டும் ,அரசியல் தொடர்பு பதவிகள்கிட்டும்,பொது நல வாதிகள் ,பூர்வீகத்தால் நன்மை,வாழ்வியல் சிறப்புகள் அடைவர்கள்.
குரு,செவ்வாய் சேர்க்கை, பார்வை இருப்பின் யோகம்தரும் சுக்கிரன்சேர்க்கை,பார்வை இருப்பின் பிறரின் வாழ்க்கைத் துணையை விரும்பியடையக் கூடியவர்கள்.
உத்திராடம் நட்சத்திரத்தில் சூரியன் இருக்கபிறந்தவர்கள் பிறருக்கு வழிகாட்டும் ஆசிரியராக இருப்பார்கள்.
மகர:-  லக்கினத்தில் சூரியன்
எட்டாம் ஆம் அதிபதியான சூரியன் இருந்தால் தோற்றத்தில் குறைபாடு இருக்கும், கடுமை,மூர்க்கம், வன்மை, கோபம் இருக்கும்,கல்வியில் தடை,  எதிர் பார்க்கின்ற பலன் நடைபெறாது,பெரும்பாலும் தந்தைக்கும் ஜாதகருக்கும் பிரச்சனைகள் ஏற்படும், பேராசை,பிறர்களின்சொத்துக்கனை அனுபவிப்பர்கள்,கடின உழைப்பாளிகள், உற்றர் உறவினர் பகை,வறுமையுடம் வாழ்வு,பூர்வீக சொத்தில் பிரச்சனைகள் தந்தையால் பிரச்சனைகள்.சோம் பேரியாகவும்,அடிக்கடி பயாணங்கள் செய்வர்கள். அடிக்கடி உடல் ஆரோக்கியம் பாதிக்கும், இதய நோய் எற்படலாம்.சுகபோக வாழ்விற்கு பாங்கம்,நீண்ட ஆயுள் உண்டு,துணைவர்களோடு குறுகியகாலமே வாழ்க்கை நடத்துவார்,துணைவருக்கு ஆயுள் குறையும்.
சூரியனுடன் சனி,செவ்வாய் தொடர்பு இருந்தால் அதிக பாதிப்பு தரும்.
சூரியன் எட்டாம் ஆம் அதிபதியாவதால் லக்கினத்தில் இருப்பதால் இவர்கள் பூர்வீக வீட்டை விட்டு,பிறந்த ஊரை விட்டு,பிறந் மாநிலத்தை விட்டு வேறு வெளி மாநிலங்களில் சென்று வசித்தான் சிறந்த நிலைக்கு உயர முடியும்,திருப்திகரமான வாழ்வும்,திருப்தியாற்ற நிலையைத் தரும்.தன் செயல்புரியும் காரியங்களில் பேராடி வெற்றி கொள்ளமுடியும்.
கும்பம்  ;- லக்கினத்தில் சூரியன்
 ஏழாம் அதிபதி லக்கினத்தில் இருந்தால் மனைவியை சுற்றிச் சுற்றி வருவார்,மனைவி மீது கொஞ்சம் கசப்ணர் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் அவருக்கு அளவுக்கு அதிமான மதிப்பு மரியாதை கொடுப்பார்,உயர் பதவி கிட்டும்,பெரிய பெரிய காரியங்களை சாதிக்கத் துடிப்பார், செல்வக்கு குறையும்,சிந்தனை வளம் குறைவும், முன்கோபி ,பிறர் மனைவியை விரும்புவர்,துணைவர்களால் வெறுக்கப் படுவர்கள்,சண்டை சச்சரவு ஏற்படும், ஆன்மீகவாதி,பூர்வீக சொத்து பிரச்சனைகள்,திருப்தியில்லாத மனிதர்,அதீத காம உணர்ச்சி இருக்கும்.
சூரியன் புதன் சேர்க்கையனால் ஆண்கள் ஜாதகமனால் துஷ்டத்தனைமான மனைவி அமைவாள்,பெண்கள் ஜாதகமனால் ஜாதகி எவருக்குமே அடங்காதவராக இருப்பாள்.
சூரியனுடன் பாவிகள் தொடர்பு இருந்தாலும் அல்லது சூரியனை பாவிகள் பார்த்தால் ஜாதகருக்கு தலைமுடி அதிகம் உதிரும்.
மீன ;- லக்கினத்தில் சூரியன்
ஆறாம் அதிபதி சூரியன் லக்கினத்தில் இருந்தால் ,ஆணவம் அதிகமிருக்கும்,கடன் அதிகமிருக்கும்,பிறரைச் சார்ந்து வாழ்வர்கள்,தொழிலில் வருமானம் குறையும்,கடுமையான உழைப்பார், செல்வ வளம்,பூகழ் கிட்டும், சம்பாத்தியத்தில்  சாமர்த்தியசாலி ,அரசு ஆதாயம், பெண்களால் ஆதாயம்,குடும்பத்தில் சஞ்சலம் ஏற்படும், உடல் சுகம் பாதிக்கப்படும்,நோயின் பாதிக்கப்படும்.
சூரியனுடன் குரு அல்லது செவ்வாய் சேர்க்கை பார்வையிருப்பின் யோகம் தரும்.
சூரியன் சந்திரன் சேர்க்கை பார்வை வாழ்க்கைத்துணையால் துன்பம் தரும்.
சூரியன் சுக்கிரன் சேர்க்கை இருந்தால்தங்கள் தகுதிக்கு மேல் ஆசைப்பட்டு அவைகள் கிடைக்கப் பெறாமை காரணமாக வம்பு வழக்குகளைச் சந்திப்பர்கள்,திருமணவாழ்வில் பிரிவு பாதிப்பு ஏற்படும் ,ஆயுள் பாதிக்கும்.
சூரியன் புதன் சேர்க்கை யோக.பலனைத்தராது,பழகுகின்றவர்கள் எவராக இருந்தாலும் அவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களே எதிரிகளாகிவிடவும் நேரிடும் இயன்றவரை இப்பபடிப்பட்ட கிரக அமைப்புடைவர்கள் பிறரிடமிருந்து விலகி இருப்பது நலம் தரும்.
நல்கு மீன் உதிப்பத் திகேள் ஞாயிறும் இருக்கப் பவர்
மல்குறப் பார்க்கில் நீரால் வருபயம் சலத்தால் கண்டம்
(இ-ள்)   மீன லக்கினத்தில் சூரியன் சந்திரன் சேர்ந்து இருக்க பாவிகள் பாரேத்தால் ஜாதகர் / ஜாதகிக்கு பயமும்,நீரினால் ஆபாத்தும் ஏற்படும்.

லக்னமும்  யோகமும்

எந்த லக்னத்தில் பிறந்தவர்களுக்கு சூரியனால் ஏற்டும் யோகம்.
மேஷ லக்னம்/ராசி-:- பெரிய பதவி
ரிஷப லக்னம்/ராசி-: மாபெரும் யோகம்
கடக லக்னம்/ராசி- : பேச்சாற்றலால் யோகம்
சிம்ம லக்னம்/ராசி- :  அதிகார ஆளுமை
விருச்சிக லக்னம்/ராசி : தலைமைப் பதவி
தனுசு லக்னம்/ராசி- : நல் பாக்ய யோகம்
மற்ற லக்னம்/ராசிகள் - சூரியன் இருக்கும் பலத்தின் அடிப்படையில்
 பதவி, அதிகாரம் கிடைக்கும்.
லக்கினாதிபதி என்ற ஆதிபத்தியத்தை பெறாமல் மற்ற எந்த ஆதிபத்தியம் பெற்ற சூரியனாகிலும் . அவர் எங்கிருந்தாலும் தனித்து செயல்பட வழி இல்லை அவர் அமர்ந்த இடத்தின் அதிபதிக்கு ஏற்ப்ப பலன்களைத் தருவர்.

சூரியஜெயவேல் 9600607603 



Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்