இரண்டாவது மனைவிக்கு பிறந்த குழந்தையின் ஜாதக அமைப்பு

இரண்டாவது மனைவிக்கு பிறந்த குழந்தையின் ஜாதக அமைப்பு வந்தானே மூன்றுக்கு உடையானோடு வன்மையுள்ள ரவி கூடித் திரிகோணத்தில் அந்தமுடன் இருக்கவே மூன்றைச் சனி அன்புள்ள குருவுமே பார்த்தாராகில் விந்தையுட னிவன்ஜனனம் கருவி கொண்டு விளக்கமுடன் வந்திட்ட பிள்ளை ஆகும் எந்தையே தகப்பனுக்குத் தாரம் ரெண்டில் இன்பமுடன் இளையவள்தான் பெற்ற புத்திரன் ( சுகர் நாடி 303) (இ-ள்) மூன்றுக்குடைவனோடு சூரியன் கூடி திரிகோணத்தில் சனியுடன் இருக்க அந்த மூன்றாம் இடத்தை குருவும் சனியும் பார்த்தால் விந்தையான பிறவியாகும் . இவர்களின் தாயர் இரண்டாம் மனைவியாக வாழ்கைப்பட்டு பிறந்த குழந்தையாவர். ஜாதகனின் தந்தையை குறிப்பிடும் இடம் 9 - ஆம் இடமாகும் என்பது அனைவம் அறிவோம் தந்நையின் கூட்டாளி மூன்றாம் வீடு முலமாக அறிய முடியும். காலபுருசனுக்கு ஒன்பதாம் அதிபதி குரு / தந்தைக்கு காரகன் சூரியன் / கர்மக்காரகன் சனி இவர்களின் தொடர்பு பெற்றிருந்தால் இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர்கள். அனுபவத்தில் மிகச்சிறப்பாகவ...