போதுமடா சாமி 1 (ஜாதக ஆய்வு)

  போதுமடா சாமி  1 (ஜாதக ஆய்வு)


                   அலைபேசி வழியாக அன்பர் ஒருவர் என் ஜாதகத்தை பார்த்து எனது கஷ்டங்கள் எப்போது குறையும் என்று கூறுங்கள் அய்யா.

   நான் உங்கள் ஜாதகத்தை அனுப்பவும் என்றோன்

அவர் பிறந்த தேதி,மாதம், வருடம்,நேரம்,ஊர் விபரங்கள் அனுப்பினார்.

 மாலை 7-00 மணிக்கு அலையுங்கள் என்றோன்.

          ஜாதகருக்கு பல வகையில் விளக்கம் தந்தும், புரிந்து கொள்ளாமல் என்னை சங்கடப்படுத்தி விட்டார். அந்த ஜாதக விளக்கத்தை உங்கள் முன் வைக்கிறோன்.

 மீனம் லக்னம், லக்கினாதிபதியும் பத்தாம் அதிபதி குரு இவர் லக்கினத்திற்கு 12-ல் சனி வீட்ட்டில் உள்ளார்.


பதியனம் சுபனுமேயாகில் மாதே

பகரும் பனிரண்டு எட்டாலு சென்மன்

விதி அற்பம் நிதி தனமில்லை சென்மன்

விளங்கும் பத்தாமிடமறிந்துரை தோழி - சங்கர

       லக்னாதிபதி சுப கிரகமாகி 6-8-12-ல் இருந்தால் ஆயுள் குறையும்,செல்வம் இல்லை,10-ஆம் இடத்தின் நிலையை ஆராய்ந்து பார்கவும்.

    இவரது ஜாதகத்தில் சுபகிரகமான லக்னாதிபதி  குரு 12-ல் உள்ளார். 10 -ஆம் இடத்தை வக்கிர சனி பார்வையிடுகிறார்.இவருக்கு தொழில்,செல்வம். சுகம் எதுவும் கிடைக்கவில்லை.


மேவியதோர் லக்கினத்தோன் மெலிந்தோனாக

விரும்பியே ஆறொட்டுப் பன்னிரண்டில்

மேவியே நின்றாலும் உடலுக்கீனம்

ஆவியே யுருக நிலையடைந்து சேரும்

அழிவில்லை தென்று மேயனுகும் நோயே

  லக்க்னாதிபதி பலம்குறைந்து 6--8-12-ல் இருந்தாலும் உடல் பலம் குறைந்து விடும் உடல் மெலிந்து தீராத நோய் ஏற்ப்படும்.


 பொன்னவன் பன்னி ரண்டில் பொருந்திட இரண்டாம் இல்லின்   

   மன்னவன் பலமே குன்றி மறைந்திட சுபக்கோள் தாமும் 

     நன்மையாய் இலக்கினத்தை 

நயப்புடன் நோக்கா வாகில் 

     கன்னியர்க் கரசே கேளாய் , கைப்பொருள் நாச மாமே .


(இ-ள்) இளம் பெண்களில் ஏற்றம் மிக்கவளே ! குரு பகவான் பன்னிரண்டாமிடத்தில் போய் அமர , இரண்டாமிடத் ததிபதி வலுவில்லாமல் 6 , 8 , 12ஆம் ஸ்தானங்களில் மறைந்துவிட , இலக்கினத்திற்குச் சுபர் பார்வை இல்லாது போய்விட்டால் அந்த ஜாதகனிடம் இருப்பாக உள்ள செல்வங்கள் ( சம்பந்தப்பட்ட திசா புத்திக் காலங்களில் அழிந்து போய்விடும் . 

                       2-9-ஆம் அதிபதியான செவ்வாய் 8-ல் மறைந்துள்ளார்,


குடும்பாதீ பஞ்சமாதி குலவிய ஆறு எட்டு

திடமிலா விரயந்தன்னில் கோளப்ப அரைக்காச

                                                                    கையில் வையான்

கடங்காரனாவானென்று கலைமுனி அருள்  

                                                                                    செய்தாரே  2-5-ஆம் அதிபிதியும் இணைந்து 6-8-12-ல் இருந்தால் ஜாதகர்/ஜாதகி கையில் காசு இல்லாதவர்கள்.கடன் காரனாவர்கள்.

       ஜாதகர் ஜாதகத்தில் 2-9- ஆம் அதிபதி செவ்வாய் 8-ல் உள்ளார். ஐந்தாம் அதிபதி சந்திரன் 8-ஆம் அதிபதியுடன் இனைந்து 9-ல் நீச்சம்.

     3-8-ஆம் அதிபதியும் சுக்கிரனும்,2-9-ஆதிபதியும் செவ்வாயும் பரிவர்த்தனை பெற்றுள்ளார்கள். இந்த பரிவர்த்தனை யோயோம் தராது.

       4-ல் சனி இருந்தால் தாயாருக்கு பல துன்பங்கள் பல இடைஞ்சல்கள்.எதிரியால் துன்பம்.உடல் நலம் பதிக்கும்.ஜாதகனுக்கும் உடல் நலம் பதிக்கும்.


         மந்தனு நாலாமிடத்தினிருந்தால்

         மாதுருக்கானியே வருகும்

         அந்ததேவி தாய்க்கு சத்துரவுண்டு

          அவனுக்கு சௌவ் ஆனி

       தாயார் வாய்பேசமுடியதவார்.ஜாதகருக்கு உடல் நலம் அடிக்கடி பதிக்கிறது.


          4-7-ஆம் அதிபதி புதன் 8-ல் 6-ஆம் அதிபதியுடன் றைந்துள்ளார்.

   

ஈனமில்லக்கினாதி ஏழாமாதிபனும் கூடித்

தானமாம் வியமாரெட்டில் தாவறில் விவாகமில்லை 

         லக்கினாதிபதியும் ஏழுக்குடையவனும் இணைந்தது 6-8-12-ல்இருந்தால் ஜாதகர்/ஜாதகிக்கு திருமணம் ஆகாது.

       இவரது ஜாதகத்தில் லக்கினாதிபதி குரு 12ல்.,   7-ஆம் அதிபதி புதன் 8-ல் உள்ளார்.இன்னும் திருமணம் நடக்கவில்லை.

   சூரியன்

கதிரவனெட்டில் கலந்துமேயிருந்தால் கண்ணுக்கு 

                                                                    வருத்தம் காணும் 

மதியிலா மூடனன் அற்பமாம் புத்தி அவனுக்கு 

                                                                         வயது மட்டாகும் 

சூரியன் 8-ல் இருந்தால் கண்பதிக்கும். சிந்தித்து செயல்படும் திறன் இல்லாதவர். ஆயுள் குறைவுள்ளாவார். தந்தைக்கு ஆயுள் குறைவு எந்தவித நன்மையிராது.


பரந்திட்டேனின்ன மொன்று பகரக்கேளு

பானுமைந்தன் பால்மதிக்கு யெட்டில் நிற்க

திறந்திட்டேன் ஜென்மனுக்கு அநேக துன்பம் 

செத்திறந்து போவதற்கு யெண்ணம் கொள்வான்

அறைந்திட்டேன் அகம் பொருளும் நிலமும் நஷ்டம்

அப்பனே அரசனிடம் தோஷமுண்டாகும்

குரைத்திட்டேன் குடிநாதன் கேந்தரிக்க

குற்றமில்லை புலிப்பாணி கூறக்கேளே

    இந்த ஜாதகருக்கு சனி,சந்திரன் 6-8-ஆகா அமைந்துள்ளானர்.இவர் என்னிடம் பேசும் போதே பல தடவை விஷம் சாப்பிட்டு இறந்து விடுகிறேன் 

என்று பல தடவைகள் கூறினார்.

       முதலில் சனி தசை,இரண்டாவது புதன் தசை, மூன்றாவது கேது தசை,நான்காவது சுக்கிர தசை 

சனி 11-12-ஆம் அதிபதி,புதன் 4-7-ஆம் அதிபதி,கேது

  3-ல்,சுக்கிரன் 3-8-ஆம் அதிபதி அவர்கள்.


மீனமென்ற லக்னத்தில் மைந்தன்  சிறுபாலனுக்கு

ஆன புதன் வெள்ளி ஆகாதாம் - ஞானயைமாய்

சாமன் சப்தமாதிபதி சட்டாட்டப் பொருள் பினியும் தாமதமில்லாமல் சற்றளிப்பன்

திமையுடன் மாரகத்தை செய்திடுவன் கன்மமொடு

அட்டமத்து சுக்கிரனு மாகாது திசை முழுவதும்

கஷ்ட மெத்தக் காட்டுக் கடுங்காவல் மெத்த 

உண்டு பண்ணித் தனச்செலவும் ஒர் காசுமில்லாமல்

தொண்டைப் போல் கேழ்க்த் துலைத்திடுவன் என்று

யெந்தயிடம் போனாலும் பாவி                                                           கொடுந்திசையதனால்     

சந்தோஷம் வாராது தரித்திரமேகொடிய

புகர் திசையில் தூதுவனும் புகழ் மேஷ                                                                     வைகுண்டம்

சுந்திரக் கோள் நிலையறிந்தும் சொல்லிடுவீர்   


சூரியஜெயவேல்   9600607603


Comments

  1. அருமையான விளக்கம் நன்றி

    ReplyDelete
  2. நல்ல விளக்கம்

    ReplyDelete
  3. Pen rasi (kanni)Aan Natchithiram ( astham) vilakkam tharavum Ayya.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்