சூரியன் கிரகச் சேர்க்கை -------------
‘சூரியன் கிரகச் சேர்க்கை…….
பிருஹஜ் ஜாதகத்தின் பதினான்காவது அத்தியாயமான ‘த்விக்ரகயோகாத்யாயம்’ இரண்டு கிரகங்கள் சேர்ந்து இருந்தால் என்ன பலன்களைக் கொடுக்கின்றன என்பதைக் கூறுகின்றது.
ஒருவரின் ஜாதகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்து காணப்படுவது இயல்பு. ஒரு பாவத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்ந்திருக்கும்போது ஏற்படக்கூடிய பலன்களைப் பற்றி பார்ப்போம். நவகிரகங்களில் சூரியனே முதன்மையனவர். சூரியனுடன் சேர்ந்த கிரகங்களின் பலன்களை ஆராய்வேம்.
சூரியன் – சந்திரன்: –
சேர்ந்கை பெற்றிருந்தால், அந்த ஜாதகருக்கு நிலையான புத்தி இருக்காது. சதா மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். அவப்பெயருக்கு ஆளாக நேரிடுவதுடன் அரசாங்க தண்டனைக்கும் ஆளாகக் கூடும். கணவன் மனைவி இடையில் பணியின் காரணமாகவோ அல்லது கருத்து வேறுபாட்டின் காரணமாகவோ தற்காலிகமான பிரிவு ஏற்படும.யந்திரங்களை உருவாக்கி உபயோகிக்கும் வேலைகளைச் செய்யும் மனிதர்களையும், சிற்பம், கற்களால் கட்டிடங்களை நிர்மாணிக்கும் மனிதர்களையும் உண்டு பண்ணுகின்றான்.
.ஜாதகரின் தந்தையார் தான் பிறந்த இடத்தைவிட்டு குடிபெயர்ந்து வேறொரு இடத்தில் குடியேறுவார். ஜாதகரின் தந்தையார் சலன புத்தியுடையவர்,பிரயாணம் செய்வதில் விருப்பமுடையவர். ஜாதகருடைய தாய் தந்தையினிடையே ஒற்றுமை நிலவும்
பாரப்பா பதினைந்து நாளிலேயும் பகருகின்ற
பால்மதியும் வெய்யோனைத்தான்
சீரப்பா சீரியே அரவந்தீண்டில் செத்திடுவோர்
போர் முகத்தில் அந்த மன்னர்
ஊரப்பா ஊரேங்கும் பேதி அம்மை
உத்தமனே கவுமாரியாலே சீக்கு
பாரப்பா மன்னர்களு மடியாவிட்டால்
மகத்தான அன்னமது மடியா விட்டால்
(இ-ள்) தேய்பிறை சந்திரன் சூரியனுடன் கூடி ராகு சேர்ந்தால் யுத்தத்தில் பல மன்னர்கள் மடிவர்கள்.ஊரெங்கும் பேதி அம்மை போன்ற தொற்று நோய் தோன்றி மக்கள் நோயால் வதிப்படுவர்கள்.மன்னரும் மடியாவிட்டால் ஊரில் உணவிற்கு பஞ்சம் ( பற்றாக்குறை) ஏற்படும். இந்த பாடலில் நாட்டைப் பற்றி கூறியுள்ளார்.
சூரியன் சந்திரன் சேர்ந்து மகரம் /கும்பம் ராசியில் இருந்திருந்து 4-7-10-ல் சனி இருந்தால் திருமணம் நடைபெருவது கடினம்.
சூரியன் சந்திரன் சேர்ந்து உபய ராசியில் இருந்தால் ஜாதகரின் தந்தைக்கு இரண்டு வித கண்டம் ஏற்படுத்தும்.
சூரியன் சந்திரன் செவ்வாய் சேர்க்கை பெற்றிருந்தால் கதிர் மதி அனல் யோகம் ஏற்படும் ஜாதகர் /ஜாதகியர் தீயெண்ணம், உறவினர் பகையும், மனைவி மக்கள் பாதிப்பு ஏற்படும், உடல்நலம் பாதிக்கும், எல்லோரும் நித்திக்கப்படுவர்கள்.
சூரியன் – செவ்வாய்:
சேர்க்கை பெற்றிருந்தால் உடல் உஷ்ணம் அதிகம். நேரம் தவறாமையைக் கண்டிப்புடன் கடைப்பிடிப்பார்கள். ஆண்மைக்கு உரிய கம்பீரம் இவர்களிடம் கூடுதலாகவே காணப்படும். காவல்துறை, ராணுவம் போன்ற சீருடை சார்ந்த பணியாகவே இவர்களுக்கு அமையும்.
ஜாதகரின் தந்தையார் ஆணவமிக்கவர், தான் என்ற கர்வமுடையவர், அதிகார தோரணையுடையவர்.யாருக்கும் அடங்கிப்போகமாட்டார். சொந்தமாக நிலபுலன் உடையவர்.
அதிக சகோதரர்களும் அவர்களால் ஆதாயமும் உண்டு சேர்க்கையானது ஒரு பெண்ணின் ஜாதகத்தில் காணப்பட்டால், அந்தப் பெண்ணுக்கு தலைமைப் பண்பு நிறைந்திருக்கும். அந்த வீட்டில் மீனாக்ஷி ஆட்சிதான் நடக்கும் என்று மேலே சொன்ன பலன்கள் கூடுதலாக நடக்கும்.
சூர்யநாராயணராவ் இந்த இடத்தில் ‘in all these cases the position of the man has nothing to do with his character. Prince and statesman priests and poets, philosophers and literates have been known to be guilty of the most abominable vices while poor and ignorant men have been known to be strictly moral and religious’ என்று வியாக்கியானம் செய்கின்றார்
சூரியனுடன் செவ்வாய் ஒருவர் மற்றவரின் பார்வை பெற்றிருந்தால் அல்லது சேர்க்கை பெற்றிருந்தால் ஜாதகர் போரில் அல்லது சண்டையில் உயிர் இழப்பு ஏற்படும்.
பெண்களின் ஜாதகத்தில் சூரியன் செவ்வாய் லக்கினத்திற்கு தொடர்பிருந்தால் பெண்கள் பூப்படைவதில்லை.
கணக்கனும் கதிரவனும் கந்தனும் கூடி
காணாத இடமேவ எங்கிருந்தாலும்
கர்மியாய் பொருள் சேர்த்து காகத்துக்கீயான்
காதத்தால் பேருண்டாம் குபேரனாம் பெண்ணே
(இ-ள்) புதனும் சூரியனும் செவ்வாயும் 6 – 8 -12 -ல் சேர்ந்திருந்தால் இந்த ஜாதகர் கர்மியாய் பொருட்கள் எல்லாம் சேர்ப்பன், ஆனால் காக்கைக்கு அன்னம் போடாத கஞ்சனாவான்,இவனுடைய பேர் பல ஊர்கள் புகழ் அடைவர்கள்.
சூரியன் – புதன்:- சேர்க்கையனாது 8 பாகைகளுக்குள் ஜாதகர் பிறந்திருந்தால், புதனுக்கு அஸ்தங்க தோஷம் ஏற்பட்டு பலன் தராமல் போய்விடும். குறிப்பாக புதனின் தசா புக்தி காலங்களில் கெடுபலன்களே நடைபெறும். 8 பாகைகளுக்குப் பிறகு பிறந்தால்தான் பலன் தரும். சூரியன் புதனின் சேர்க்கையானது ஜாதகரை கணிதத்தில் நிபுணத்துவம் பெறவைக்கும்.அரசாங்க வகையில் ஆதாயம் உண்டு. படிக்கவேண்டிய வயதில் படிக்காமல் தாமதமாகவே படிப்பை முடிப்பர். தகுதியைவிட உயர்ந்த இடத்தில் வேலைக்குப் போவர். இவருடைய பணி பெரும்பாலும் அரசாங்கப் பணியாகவே அமையும். தாய்மாமன் உறவுமுறை சுமுகமாகவும் ஆதாயம் தருவதாகவும் இருக்கும். வாக்குத்திறமை பெற்றிருப்பர்
எந்தக் காரியத்தையும் சாமர்த்தியத்தோடு செய்பவனாகவும், மிகவும் கூர்மையான புத்தியுடையவனாகவும், புகழையும் சுகத்தையும் பெற்றவனாகவும் இருப்பான்.
சூரியனை நெருங்கிய நண்பராக புதன் கருதுவதால், புதனுடன் சூரியன் இணைந்திருக்கும் நிலையில் நன்மைகள் உண்டு.
ஜாதகரின் தந்தையார் புத்திசாலியாக இருப்பார்.சொந்தமாக நில புலன்கள் இருக்கும்.வாக்கு வன்மையுடையவர்.வியாபார நோக்கமுள்ளவர். கலகலப்பானவர்.
சூரியன்-குரு:- சேர்க்கை பெற்றிருந்தால் ஜாதகருக்கு பொதுவாக இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று சொல்லலாம். பொன் சம்பந்தப்பட்ட வியாபாரம் செய்யும் குடும்பத்தில் இருந்து வாழ்க்கைத் துணை அமையும். கோயில் திருப்பணிகளிலும் சமூகநலப் பணிகளிலும் தங்களை ஈடுபடுத்திக்கொள்வர். நிதி அமைச்சகம், வங்கிகள், நிதிநிறுவனங்களில் வேலை அமையும். அத்தகைய பணியும்கூட தலைமையிடத்தில் இருக்கும். ஒருசிலர் பேராசிரியராகவும் பணிபுரிவர். இயல்பிலேயே ஆன்மிக நாட்டம் கொண்டிருக்கும் இவர்களில் சிலர் ஆன்மிக குருவாகவும் பிரகாசிப்பர்.
இரக்கமற்ற மனிதனாகவும் அடுத்தவர்களுக்காகக் காரியங்கள் செய்பவனாகவும் இருப்பான்.
ஜாதகரின் தந்தையார் நல்ல குணங்களையுடையவர்.இரக்க குணமுள்ளவர்.கடவுள் பக்தியுள்ளவர். தர்ம குணமுள்ளவர்
கொஞ்சிடும் எட்டுபத்தில் குருவுமே இரவியோடு
தஞ்சமாய் நின்றாராகில் சாற்றுவாய் கிழக்கே பாழாம்
(இ-ள்) லக்கினத்திற்கு 8 – 10 -ஆம் இடங்களில் குரு சூரியனோடு அடைக்கலமாய் சேர்ந்து அமர்ந்திருக்க. தன் வசிக்கும் வீட்டிற்கு கிழக்குப்புற வீடு பாழாகிப்போய் விடும்.
ஒரு ஜாதகத்தில் சூரியபகவான் பாரமாத்வாக இருக்கிறர். ஜீவாத்மா குரு ஆவர் பரமாத்மாவாகிய சூரியனை குரு பார்த்தால் சீவ-சிவ ஐக்கியத்தில் பற்று உண்டாகிறது, மேலும் விருப்பும் அளவு வாழ்நாள் அளவும் நீடிக்க வாய்ப்புள்ளது
சூரியன் – சுக்ரன்:- சேர்க்கை பெற்றிருந்தால் ஜாதகருக்கு எதிர்பாராத பொருள்வரவைத் தரும். இவர்களுக்கு எதிலும் நஷ்டம் ஏற்படாது. ராணுவத் தளவாடங்கள் விற்பனை மூலம் பணம் சம்பாதிப்பர். வசதியான குடும்பத்தில் இருந்து வாழ்க்கைத் துணை அமையும். அந்நியப் பொருள்களைப் பயன்படுத்துவதில் ஆர்வம் அதிகம் இருக்கும். விலை உயர்ந்த சொகுசு வாகன வசதிகள்
இவர்களுக்கு உண்டு. சொந்தமான வீட்டில் அமையும்.அதேநேரத்தில் சுக்கிரனுக்கு சூரியன் ஆகாதவர் என்பதால் சுக்கிரனுடன் இணையும் நிலையில் சுக்கிரனது காரகத்துவங்களை சூரியன் பாதிப்பார்.
குத்துச் சண்டை செய்வதன் மூலமும், ஆயுதங்களைத் திறமையாக உபயோகிப்பதன் மூலமும் பணம் சேர்க்கின்றான். பொது மேடையில் தங்களது திறமைகளை வெளிக்காட்டிப் பொருள்
சம்பாதிப்பவர்கள் .
ஒருவர் ஜாதகத்தில் சூரியன் சுக்கிரன் இணைவு செல்வ செழிப்பினால் கர்வத்தை ஏற்படுத்திவிடுகிறது.
சூரியன் – ராகு:- சேர்க்கை பெற்றிருந்தால் ஜாதகர்கள் சட்டத் துறையில் நிபுணத்துவம் பெற்றிருப்பர். எதிலும் மாற்றுச் சிந்தனையும், புரட்சிகரமான எண்ணங்களும் கொண்டிருப்பர். பிறருடைய சொத்துக்கள் எல்லாம் இவர்களுக்கு எதிர்பாராமல் வந்து சேரும். பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருள்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவைகளை ஏற்றுமதி செய்து பணம்
சம்பாதிப்பர். இவர்களுக்கு அமையக்கூடிய பணியும்கூட
மீன்வளத்துறை போன்று கடல் சார்ந்த பணியாகவே இருக்கும்.
ஜாதகரின் தந்தையார் எப்பொழுதும் நோய்வாய்ப்பட்டிருப்பார். அவருக்கு ஆயுள் குறைவு.ஜாதகருக்கு கண் நோய் வரும்
ராகுவுடன் நெருங்கும் தூரத்தைப் பொருத்து, சூரியன் மிகவும் பலவீனமடைவார்.
சூரியனோடு ராகு கிரகங்களின் இணைவு சூரியனுக்கு நீச நிலையே ஏற்படுத்தி கர்வ பங்கத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.
சூரியன் – கேது:- ஆன்மிகவாதியாக இருப்பர். ஆன்மிகம் தொடர்புடைய மரங்களைக் கோயில்களுக்குக் கொடுப்பர். மரங்களை வெட்டி விற்பனை செய்வதால், இவர்கள் மரங்களை நட்டுப் பராமரிக்கவும் செய்வர். ஒருசிலர் காய்,கனி வகைகளை விற்றும் ஜீவனம் செய்வர். இவர்களுக்கு வனத்துறை சார்ந்த பணிகளே பெரும்பாலும் அமையும்.வீண்பழிகள் ஏற்படும், தீவர்களின் நட்பு கிடைக்கும்
கேது =ஞானகாரகன் சூரியன் =ஆத்மகாரகன். நீங்க ஆத்ம ஞானமே முக்கியம் என வாழ்ந்தா நன்மை இல்லை என்றால் சூரியனுடைய காரகம் அனைத்தும் பாதிக்கும்.
ஜாதகரின் தந்தையார் மன விரக்தியுடையவர். ஆன்மீகத்தில் ஈடுபாடு உள்ளவர்.தனிமையை விரும்புபவர். ஜாதகருக்கு கண் நோய் வரும்.
கேதுவுடன் நெருங்கும் தூரத்தைப் பொருத்து, சூரியன் மிகவும் பலவீனமடைவர்.
சூரியனோடு கேது ஆகிய கிரகங்களின் இணைவு சூரியனுக்கு நீச நிலையே ஏற்படுத்தி கர்வ பங்கத்தையும் ஏற்படுத்திவிடுகிறது.
சூரியன் லக்னாதிபதியாக இருந்தால், லக்னாதிபதி கெடுபலன் செய்ய மாட்டார் என்ற விதிப்படி மேற்கண்ட அசுப பலன்கள் சுப பலன்களாக மாறும். அதேபோல் சூரியனோ அல்லது சந்திரனோ அங்கு ஆட்சி அல்லது உச்சம் பெற்றிருந்தாலும் கெடுபலன்கள் ஏற்படாது. மற்றுமொரு முக்கியமான விதியையும் குறிப்பிட வேண்டும். அதாவது கேந்திர ஸ்தானாதிபதியும் திரிகோணாதிபதியும் யாரோடு சேர்ந்திருந்தாலும், தான் நல்லது செய்வதுடன் தன்னுடன் இணைந்திருக்கும் கிரகத்தையும் நல்லது செய்யவைக்கும்
Comments
Post a Comment