நீச்சபங்க ராஜயோகம்
உலகப் புகழ் தரும்
நீச்சபங்க ராஜயோகம்
கிரகங்கள் நீசம் பெறுவது சிறப்பில்லை , கிரகங்கள் பலம் இழந்து இருப்பதே நீசம் எனப்படும் .
ஜாதகரின் ராசிச்சக்ரத்தில் ஏதாவதொரு கிரகம் நீசமாக இருக்க அந்தக் கிரகம் நின்ற ராசி நாதன் , லக்கின சந்திரனுக்கு கேந்திரத்திலோ ( அ ) தனது உச்ச ராசியிலோ இருந்தால் அந்த கிரகத்தின் நீசதன்மை நீங்கி ஜாதகருக்கு ராஜயோக பலன்களை தருவார்கள் ஜாதகத்தை ஆராய்ந்து பலனை கூற வேண்டும் . நீசம் என்பது பலம் இழந்து இருப்பது எனப் பொருளாகும் . நீசக்கிரகம் பலம் இழந்த நிலையில் எப்படி ஒரு ஜாதகத்தை முன்னேற்ற முடியும்.
என்பதை காண்போம் .
துலா ராசியின் 10 வது பாகையில் சூரியன் நீசம் , விருச்சிக ராசியின் 3 வது பாகையில் சந்திரன் நீசம் ,
கடக ராசியின் 28 வது பாகையில் செவ்வாய் நீசம் ,
மீன ராசியின் 15 வது பாகையில் புதன் நீசம்
மகர ராசியின் 5 வது பாகையில் குரு நீசம் ,
கன்யா ராசியின் 27 வது பாகையில் சுக்கிரன் நீசம் ,
மேசம் ராசியின் 20 வது பாகையில் சனி நீசம் ,
மேல்கண்ட பாகையில் உரிய கிரகங்கள் இருக்கும் - போது நீசம் பெற்று பலம் இழந்து விடுகிறது . பல விதிமுறைகளால் நீசம் பெற்ற கிரகங்கள் பலம் பெற்றுவிட்டால் அது தனது திசை புக்திக்காலங்களில் அளவற்ற ராஜயோகம் தரும் . இதற்கு நீச பங்கராஜயோகம் என்று பெயர் .
நீச பங்க ராஜ யோக்கிரகங்களுக்கு சுப ஆதிபத்தியம் இருப்பது மிக அவசியமாகும் . அஸ்தமனம் , கிரக யுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும் . நீச பங்கம் பெற்ற இடமானது சுப இடமாக இருப்பது மிக அவசியமாகும் .
மேல்கண்ட பாதிப்புக்கள் எதுவும் இல்லாத நீசபங்க - கிரகமானது தனது திசா புக்திக் காலங்களில் சுப காரியங்களை செய்து வைப்பார்கள் , புத்திர பாக்கியம் , திருமண யோகம் , வாகன வசதிகள் , உயர்பதவி , கௌரவ பதவிகள் ஆளடிமைகள் , தொழிலில் இரட்டிப்பு லாபங்கள் , பொன் , பொருள் சேர்க்கை வெளிநாட்டு பிரவேசம் அரசு சன்மானம் , வீடு வாகனம் ஜாதகர்க்கு கிடைக்கும் .
நீசஸ்திதா ஜன்மனிக்ர ஹேந்ரா ! ஸ்லேச்சாம் சகா ராஜஸமான பாக்ய - ( சாராவளி )
(இ-ள்) ஜென்ம ராசியில் எந்த கிரகமும் நீசமானபின் அந்த கிரகம் நவாம்சத்தில் ஆட்சி உச்ச வீட்டில் இருந்தால் நீச்ச பங்கம் ஏற்பட்டு ராஜயோகத்தையும் செல்வத்தையும் தருவர்கள்.
நீசேக்ரஹ ஜென்மதி யஸ்தி தஸ்யாத்
தத்ராசி நரதோச்சபதர் ' : கரஹேந்த்ர
கேந்ரஸ்திதஸ் திதஸ் சேத்யத் ரயோக
ஜாதே பலேத் பூபதி சக்ரவர்த்தி
(இ-ள்) நீச்சக்கிரகம் நின்ற ராசிநாதன் ஆட்சி , உச்சம் பெற்றலும் லக்கினத்திற்கு கேந்திரத்தில் இருந்தால் ஜாதகர் ராஜயோகத்தை அனுபவிப்பார் . செல்வம் சொல்வாக்கும் ஜாதகர்க்கு கிட்டும் .
கண்டளு நீசபங்க ராஜயோகம்
காணும் வகை நிசத்தானத்து வேந்தும்
திண்டிறல் சேர்ந்திடும் மனையுச்ச வேந்தும்
திங்கள் கேந்திரந்தன்னிற் சேர்ந்தாராகில்
மண்டியிடு நீ சபனொ சிந்து கீர்த்தி
மகா ராஜனென வாழ்த்திடுவன் பூவில்
கொண்டவர் நீசத்திலிருந்தாலும் ஒரு கோள்
குறி நீசங்கெடிலெல்லாக்கோளு நன்றே
(இ-ள்) நீசபங்க ராஜயோகம் என்றால் நீச்சஸ்தானா திபதியும் அந்த வீட்டுக்கு அதிபதி உச்சம் பெற்றாலும் சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் நீசபலன் நீங்கி கீர்த்தியோடு மகாராஜனென உலகில் புகழ் பொறுவான் .
அதிக கிரகங்கள் நீசத்திலிருந்தாலும் நீச்சங்கெட்டாலும் எல்லாக்கிரகங்களும் சுப பலன் செய்யும் . ஒரு நீசன் வக்ரம் பெற்றிருந்தால் நீச்சபங்க ராஜயோகமாகும் . ஒரு நீசனை இன்னொரு நீசன் பார்த்தாலும் நீசர்கள் பரிவர்த்தனை பெற்றாலும் நீச்சபங்க ராஜயோகமாகும் .
ஒரு நீசன் ராசியிலும் , அம்சத்திலும் ஒரே ராசியில் இருந்தால் வர்க்கோத்தமாம்ஸம் பெற்றலும் நீச்ச பங்க ராஜயோகம் .
கடப்பா இன்னமொரு சூட்சுமங்கேளு
சுகமுள்ள ஜென்மனுட ராசி தன்னில்
மாடப்பா மதிமங்கி ஒளி வில்லாமல்
மகத்தான கோளது தானீசமோ
கூடப்பா குடினாதனம் புலிக்கு
கொற்றவனே கேந்திரமுமுச்சமாக
நாடப்பா போகருட கடாட்சத்தாலே
நலமாக செப்பிடுவாய் நீசம் போச்சே
(இ-ள்) ஜாதகரின் ராசி சக்ரத்தில் எதாவதொரு கிரகம் நீசமாக இருக்க அந்த கிரகம் நின்ற ராசிநாதன் சந்திரனுக்கு கேந்திரத்திலோ அல்லது தனது உச்ச ராசியிலோ நின்றால் அந்த கிரகத்தின் நீசத்தன்மை நீங்கி ஜாதகருக்கு ராஜயோக பலன்களை தருவார்கள் .
சந்திரனும் , செவ்வாயும் ஒருவருக்கொருவர் நண்பர்கள் ஆயினும் ஒருவர் வீட்டில் ஒருவர் நீசம் பெறும் நிலை ஏற்படுகிறது .
முரட்டுத்தனம் உள்ளவர்களிடம் மனம் இயங்காது. மனம் இயங்கும் போது முரட்டுத்தனம் இயங்காது.
புதனும் சுக்கிரன் ஒருவருக்கொருவர் நண்பர்கள் . சுக்கிரன் புதன் வீட்டில் நீசம் பெறும் நிலை ஏற்படுகிறது .
அறிவு இயங்கும் போது காமம் & ஆசை இயங்காது.
காமம் & ஆசை இயங்கும் போது அறிவு இயங்காது.
சூரியனும் , சுக்கிரனும் பகைவர்கள் . நீசம் பெறுகிறார் துலாத்தில் ,
ஆளுமை உள்ளவர்கள் காமத்திற்கு அடிமையாவதில்லை. காமத்திற்கு அடிமையானவர்கள் ஆளுமை செய்யமுடியாது.
பாவக்கிரகங்கள் நீச பங்கம் ஏற்பட்டால் அதன் மூலமாக ராஜயோகம் ஏற்பட்டால் ஒருவர் செல்வ செழிப்பை அடைவர் என்றாலும் நல்ல குணங்களை ஜாதகர் இழப்பார் . தீய எண்ணம்
சுபக்கிரகங்களுக்கு நீசபங்கம் உள்ளவர்கள் பண்புகளை ஏற்பட்டால் நல்ல பண்புகளை அடைவர் . நற்பணிகளில் ஆதாயம் இல்லை .
பன்னிரண்டுடையோன் நின்றபதியவனெட்டில் நீசந்
தன்னிலே நிற்க அந்தக்தானத்தோன் கேந்திரகோணம்
உன்னதமாயிருக்கவுலகை யாளு ராஜனென்றே
இன்னிலப்பிறந்த சேய்க்கு இயம்பினர் கணித நூலோர்
(இ-ள்) 12 ஆம் அதிபதி 8 ல் நீச்சம் பெற, 8 ஆம் அதிபதி கேந்திர கோணத்திலிருந்தால் உலகத்தை ஆளும் அரசனாவான்.
நீசக்கிரகம் நின்ற ராசிக்குரியோன் (அ) அந்த ராசியில் உச்சமடையும் கிரகம் இவைகளில் ஏதேனும் லக்கினம் (அ) சந்திரனுக்கு 1-4-7-10-ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தால் ஜாதகர் / ஜாதகியர் அவரவர்களின் நிலை மற்றும் தகுதிகளுக்குட்பட்டு சிறப்பான வசதியான வாழ்கை அமையப் பெற்றவர்களாக இருப்பர்கள்.
நீசமடைந்த கிரகம் நின்ற ராசிக்குரியோன் லக்கினத்திற்கு 6-8-12-ஆம் வீடுகளைத் தவிர வேறு ஏதேனும் வீடுகளில் இருந்தாலும் , நீச்ச கிரகத்தை பார்த்தாலும் ஜாதக / ஜாதகியர் அவரவர் நிலைமைக்கேற்ப ஏதேனுமோர் வகையில் பெயர், புகழ் பெறக்கூடியவர்களாக இருப்பர்கள்.
பொதுவாகவே ஜாதகத்தில் கடகத்தில் செவ்வாய் இருக்க, விருச்சிகத்தில் சந்திரனும் இருந்தால் ஜாதகர் / ஜாதகியர் பொருளாதார நிலையில் உன்னதமான உயர்வான நிலையை அடைவர்கள்.
பொதுவாகவே ஜாதகத்தில் தனகாரகனாகிய குரு மகரத்தில் இருந்து விட்டால் ஜாதகர் / ஜாதகியர் தங்களின் செல்வம், செல்வாக்கு, பொருளாதர நிலையில் பதிப்புகள் ஏற்பட்டும்.
ஆனால் காலபுருஷனின் 9-ஆம் அதிபதியான குரு காலபுருஷனின் 4-ஆம் அதிபதியான சந்திரனின் சேர்க்கை & பார்வை பெற்றிருந்தால் செல்வம், செல்வாக்கு, பொருளாதார நிலையில் பாதிப்பு ஏற்பாடது. வேறு காரணங்களால் பாதிப்புகள் ஏற்பட்டு விட்டாலும் கூட அவைகள் தற்காலிகமானதாக அல்லது நிவர்த்தி ஏற்படும்.
மேஷத்தில் சூரியன் + சனி
கடகத்தில் செவ்வாய் + குரு
கன்னியில் புதன் + சுக்கிரன்
துலாத்தில் சூரியன் + சனி
மகரத்தில் செவ்வாய் + குரு
மீனத்தில் புதன் + சுக்கிரன் சேர்க்கை இருந்தால் ஜாதகர் / ஜாதகிக்கு இவ்விரு கிரகங்களில் ஒருவரின் திசையில் மற்றவர் புத்தியில் சிறப்பன திடீர் தனலாபங்கள், உழைப்பின்றி செல்வம் உறுதியாக கிடைக்கும். ஆனால் சில இழப்புகள் ஏற்படுத்திவிடும்.
2-ஆம் அதிபதி (அ) 2-ஆம் வீடு, 5-ஆம் அதிபதி நீச்சம் அசுபர் சேர்கை பெற்றிருந்தால் ஜாதகியர் / ஜாதகர் பொருளிழப்பிற்கு ஆளாவர்கள். அரசு வகையில் பாதிப்புகள், தங்களின் குடும்பத்தை நல்லபடியாக நிர்வகிக்க முடியாமல் கஷ்டப்படுவர்கள். பிறரின் சந்தேகங்களுக்கு ஆளாக நேரிடும்.
சதாம் உசேன் ஜாதகம்
8 ல் குரு நீசம். 8க்குரியோனும் 10க்குரியோனும் பரிவர்த்தனை அதனால் நீச பங்க ராஜ யோகம்.
நீசமான குருவின் வீட்டு அதிபர் சனி உச்சம் பெற்ற சுக்கிரனுடன் சேரந்ததும் நீச பங்கமே
நீசமான சந்திரன் ஆட்சிபெற்ற செவ்வாயுடன் சேர்ந்ததும் நீக்சபங்கம் பெற்று அனைத்து சுகபோக வசதியுடன் ராஜயோகத்தை அனுபவித்தார்.
சுக்கிரன் உச்சம் பெற்று 10ல் இருக்க அதனுடன் பாக்கியாதிபதி சேர்ந்தது சிறப்பான யோகம்.
லக்னாதிபதி 12ல் இருக்க நிறைந்த அறிவை பெற்று இருப்பார்.
6ல் செவ்வாய் சந்திரனுடன் சேர்க்கை இதில் செவ்வாய் ஆட்சியாக உ்ள்ளது வீரமும் மன துணிச்சலும் அதிகம்.
12 ஆம் வீட்டிற்கு 8 கிரகங்கள் சம்பந்தப்படுகிறது. அதனால் அவர் கடுமையான போராட்டங்களை சந்தித்தித்தார். ஆறவது இடமும் 12வது இட்மும் மிகவும் பலமாக இருக்கிற காரணத்தினால் மிகவும் பலம் வாய்ந்த போராட்டங்களை அவர் நிகழ்த்தினார்
ஈராக்கின் அதிபராக 23 ஆண்டுகள் ஆட்சி செய்தார் சர்வாதிகாரியாக !
சூரியஜெயவேல் 9600607603
அருமையான பதிவு நல்வாழ்த்துக்கள்
ReplyDeleteSirappu......
ReplyDelete