மனமும் பஞ்சபூதங்களும்

 மனமும் பஞ்சபூதங்களும்


" காரொளி அண்டம் பொதிந்துல கெங்கும் 

பாரொளி நீரொளி சாரொளி காலொளி 

வானொளி ஒக்க வளர்ந்து கிடந்து பின் 

நேரொளி ஒன்றாய் நிறைந்தங்கு நின்றதே " 

   ( இ - ள் ) கரிய ஒளியானது அண்ட வடிவான பேருவகை மூடி உலகங்கள் எங்கும் மன் / நீர் / நெருப்பு காற்று ஆகாயம் ஆகிய ஒளிகளாக ஒருங்கே வளர்ந்து கிடந்து பின் ஒரேபேரொளியாக நிறைந்து பரந்து நின்று என்பததாமே ! 


   மனம் என்பது எண்ணங்களின் தொகுப்பு என்பதால் அண்டசராசரம் முழுவதும் மனமே நிறைந்துள்ளது . இயற்கையும் மனமும் ஒன்றுக்குள் ஒன்று பிரிக்க முடியாததாக விளங்குகிறது . இயற்கையானது பஞ்சபூதங்களால் ஆனது . பஞ்சபூதங்கள் நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் ( வெற்றிடம் ) என பஞ்சபூதங்கள் எல்லா இடங்களிலும் பிரிந்தும் , சேர்ந்தும் உள்ளன . மனதின் ஆசையில் உருவாகும் தொண்ணூற்றியொன்பது ( 99 ) குணங்களுக்கு ஏற்ப பஞ்சபூதங்கள் தொண்ணூற்றி யொன்பது தனித்தியங்கும் தனிமங்களாகவும் விளங்குகிறது . தனிமங்கள் ஒன்றுக்குள் ஒன்று மாறி மாறி இணைந்து பலவகையான அணுத்துகள்களையும் , தனிமம் போன்ற பொருட்களையும் உருவாக்குகிறது . எல்லா தனிமங்களிலும் , ஜீவன் ( பாரா ஹைட்ரஜன் ) உள்ளது . மனம் பஞ்சபூதங்களின் இயக்கங்களுக்காக ஜீவனை பகடைகாயாக மாற்றுகிறது .

     மனதில் ஆகாயம் வேலை செய்தால் , மனம் எண்ணங்களற்ற நிலைக்கு சென்று விடும் . அதாவது மனம் வெறுமையாகும் 

   மனதில் காற்று வேலை செய்தால் , மனம் ஓர் நிலையிலிருக்காது . எங்காவது அலைந்து கொண்டேயிருக்கும் . மனம் சப்த நிலையிலிருக்கும் .

   மனதில் நெருப்பு வேலை செய்தால் , மனம் தூய்மையடையும்

   மனதில் நீர் வேலை செய்தால் , மனம் பந்தங்களையும் , பற்றுகளையும் உண்டு பண்ணும் . 

மனதில் நிலம் வேலை செய்தால் , மனம் , தமோ குணத்திலும் , அறியாமையிலும் , பிடிவாதத்திலும் லயிக்கிறது .

 . ஆகாயம் உயிரினங்களில் வரும் கண்ணீரை பஞ்சபூதங்களும் அதன் அடுக்குகளும் , பஞ்சபூதங்களில் முதன்மையானது ஆகாயம் , இல்லை எனில் எதுவும் இயங்க முடியாது . உயிரினம் ஏற்படும் மனக்கொந்தளிப்பில் வெளிவரும் கண் ஏந்தக்கூட ஆகாயம் தேவைப்படுகிறது . ஆகாயம் உள்ளதால் தான் உலகில் உள்ள அனைத்தும் அங்கம் இங்கும் , ஓரிடம் விட்டு மற்றோர் இடத்திற்கு மாறி , மாறி பயணிக்க முடிகிறது . ஆகாயம் இல்லை எனில் , ஆண் , பெண் என்ற உயிரினம் கிடையாது . போக்குவரத்து கிடையாது . பன் பூதங்களானாலும் , கோள்கள் ஆனாலும் வெற்றிடம் குறைந்தாலோ , இல்லாமல் போனாலோ , அவைகள் இயங்குவதற்கு இடம் கிடைக்காமல் ஒன்றுக்கு ஒன்று முட்டி மோதி , தன்னிலையற்று பிரம்மத்துக்குள் அடங்கும் ஆகாயம் பல அடுக்குகளாக உள்ளது நான்காவது வானத்தில் பிராணன் உயிரோட்டமாகவும் , வாயுவாகவும் உள்ளது . மூன்றாம் வானத்தில் சந்திரசக்தியும் , பிரம்ம நிலை பிராணனும் இணைந்து சூரியனாக உள்ளது . ) இரண்டாவது வானத்தில் சக்தியும் , சந்திரனும் இணைந்து , உயிராகவும் உடலாகவும் உள்ளது .

  மேலிருந்து கீழ் வானத்தில் ( முதல் ) சக்திதுகள் நெருப்பாகவும் , அணைந்தும் உள்ளது . எல்லாம் ஐந்து வானத்துக்குள் இயங்குகிறது . பூமி ஆகாயத்தில் மேற்கு பக்கம் மலையாகவும் , மேற்கு பக்கம் கங்கை நீரை சுமக்கும் மலைத்தொடராகவும் உள்ளது . தெற்கு பக்கம் துகள்களாகவும் , துகள்களின் மோதலால் நெருப்பாகவும் , கிழக்கு பக்கம் கடலாகவும் உள்ளது . ஆகாயத்தில் முதலில் நுழையும் பஞ்சபூதம் வாயுவாகும் . இவ்வாயு ஆகாயத்தினுள் நுழைந்து , ஆகாயத்தின் சுழற்சியால் பலவித வாயுக்களாக மாறுகிறது . இவ்வாயு ஆகாயம் வாரியாக கீழ் இறங்க இதன் தன்மைகளும் குணங்களும் மாறும்

நெருப்பு ( தேயு ) ( அக்னி , ருத்ரன் , வெப்பம் , எரிமலை , சூடு ) ஆகாயத்திற்க அடுத்த பூதம் நெருப்பே . மனமே பஞ்சபூதங்கள் , பஞ்ச பூதங்களே ரூபங்கள் , ரூபங்களின் சேர்க்கையே உருக்கள் . உருக்களே உலகம் இவ்வுலக இயக்கத்திற்கு மனமே தங்கரூப சக்கர வடிவில் உள்ளது . இதில் நெருப்பே அக்னிதேவன் , விரகதாபம் , காமக்கணை என பல பெயர்கள் கொண்டு அழைக்கப்பட்டாலும் நெருப்பு இல்லாவிட்டால் இங்கு எதுவும் இயங்க முடியாது .ஆதியிலிருந்து வந்த எல்லாவற்றையும் , மீண்டும். ஆதிக்கே அனுப்புவது ( நெருப்பு வைத்தால் எதுவும் இங்கு இருக்காது ) நெருப்பின் வேலை . இரும்பு நெருப்பின் அமைதி ரூபமே : விஞ்ஞானப்படி இரும்புவின் தன்மை மற்றதுகள்களில் உள்ள கருமையத்தை உள்ளிளுக்கும் தன்மையுள்ளது 

. ஆகவே தன்னை விட எடை குறைவானவற்றை தன்னுள் உள்ள அணுவின் அடுக்குகளுக்கு ஏற்ப , தன் காந்த சக்தியால் ஈர்த்துக்கொள்கிறது . இரும்புவின் அணு எண் ( 26 ) இருபத்தியாறு என்பது இரும்பு அணுத்துகளிலுள்ள பரோட்டான்களையும் , புரோட்டான்களை சுற்றியுள்ள எலக்ட்ரான்களையும் குறிக்கிறது . புரோட்டான்கள் என்பது சக்தியாகவும் நேர் அயனியாகவும் , பூமியாகவும் , கோள்களாகவும் , இராசிகளாகவும் , உருக்களின் ரூபமாகவும் , ஜீவ ராசிகளில் உடல்களாகவும் , பல வண்ணங்களாகவும் உள்ளது . நெருப்பின் அமைதி கெட்டால் நிலமோ , ரூபமோ எல்லாம் எரிந்து பஸ்பமாகிவிடும் . அதாவது மோட்சம் ( முக்தி ) கிடைத்துவிடும் . | எலக்ட்ரான் என்பது ஜீவனாகவும் எதிர் அயனியாகவும் , நிலவாகவும் , நீராகவும் , எண்ண ங்களாவும் உள்ளது . நெருப்பே ஒவ்வொரு மனிதனுக்கும் , ஜீவராசிகளுக்கும் , பொருள்களுக்கும் தன்மையையும் , குணங்களையும் அளிக்கிறது நிலம் ( பிரித்திவி ) பூமி என்பதும் , இரும்பு , இரத்ததுளி ( குருதி ) , பிரம்மம் என்பதும் ஒன்றே . . .மனமும் பஞ்சபூதங்களும் , அதன் உருமாற்றங்களும் , பரிணாமங்களும் , ஜீவன் அக்னியில் உருகி தன்னிலை அறியக்கூடிய , தன்னிலை அறியாத நிலை என இரு கூறுகளாகி ஆகாயத்தில் விழும் பொழுது நீராகிறது . இந்த நீர் ஆகாய கங்கையாகவும் , மழையாகவும் மாறுகிறது . இந்த நீர்த்துளிகள் எந்த பிரம்மசக்தியுடன் இணைகிறதோ அதற்கேற்ற உருவாக மாறுகிறது

 . மண்ணும் நீரும் : இனிப்பு மண்ணும் நெருப்பும் புளிப்பு மண்ணும் காற்றும் துவர்ப்பு நீரும் நெருப்பும் : உப்பு நெருப்பும் காற்றும் : கார்ப்பு காற்றும் ஆகாயமும் : கசப்பு அறுசுவை ஆதாரப் பொருட்கள் ஒன்றுக்குள் ஒன்று மாறி மாறி இணையும் பொழுது எண்ணிலடங்கா உயிர் ஆதாரப் பொருட்கள் உருவாகிறது , மண்ணும் நீரும் நெருப்பும் - கரும்பாகிறது நீரும் , மண்ணும் , நெருப்பும் - புளியமரமாகிறது காற்றும் , நீரும் , ஆகாயம் - வேப்ப மரமாகிறது நெருப்பு , மண்ணும் , நீரும் உளுந்து செடி ஆகாயம் , நெருப்பும் , நீரும் மிளகாய் செடி நீரும் நெருப்பும் உப்பு என ஹைட்ரஜனே ( ஜீவன் ) பல உருக்களாக , செடிகளாக , மரங்களாக மாறுகிறது . மண்ணும் நீரும் நெருப்பும் , காற்றும் கலத்து பலவித ஜந்துகளாகவும் , மண்ணும் , நீரும் நெருப்பும் , காற்றும் ஆகாயம் கலந்து பலவித உயிரினமாகவும் , பிரபஞ்சத்தில் தோன்றுகிற அனைத்தும் ஒன்றாக ஜீவனில் இணைந்து மனிதனாக உருவாகிறது .

தொகுப்பு    :-  சூரியஜெயவேல்







Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்