உறவில் விரோதம்
உறவில் விரோதம்
பிறந்த ஜாதகத்தில் லக்னத்திலிருந்து
.மூன்றில் சூரியனின் இருந்தால் தந்தை விரோதம் .
முன்றில் சந்திரன் இருந்தால் மாமன் விரோதம் .
முன்றில் செவ்வாய் இருந்தால் சகோதர நாசம் .
மூன்றில் புதன் நண்பா்கள் விரோதம் .
மூன்றில் வியாழன் இருந்தால் புத்திரா் விரோதம் .
மூன்றில் சுக்கிரன் இருந்தால் களத்திர விரோதம் .
மூன்றில் சனி இருந்தால் ஆயுள் அதிகம் .
சொல்லுமையா ராசிதனக் கைந்து பத்தில்
சோர்வன சேய்நிற்கில் மாமற்காகா
புல்லுருவாய் சனி நிற்கில் பிள்ளைக்காகா
சொல்லாத ரவி நிற்கில் பிதாவுக்கு பிள்ளைக்காகா
பொல்லாத சசி நிற்கில் மாதாவுக்காகா
சோர்ந்து நின்ற ரவி சோம ஏழுக்கப்பால்
சொல்லுகிறேன் சனி செவ்வாய் நிற்பாராகில்
சோகமுள்ள தந்தை தாய் மரணமாமே
1, ஜாதகத்தில் லக்கினத்திற்கு 5-10-ல் செவ்வாய் இருந்தால் தாய் மாமாவுக்கு ஆகாது.
2, 5-10-ல் சனி இருந்தால் குழந்தைக்கு ஆகாது.
3, 5-10-ல் சூரியன் இருந்தால் தந்தைக்கு ஆகாது.
4, 5-10-ல்சந்திரன் இருந்தால் தாயருக்கு ஆகாது.
5, சூரியனும்,சந்திரனும் இணைந்திருந்து இவர்களுக்கு
7-ல் செவ்வாய்,சனி இணைந் திருந்தால் தந்தையும், தாயும் மரணமடைவார்கள்.
இராம தோவர் காவியம்
Comments
Post a Comment