வாழ்க்கை ஒரு வட்டம்

 வாழ்க்கை ஒரு வட்டம்

‘நீர்’தேங்க நீர்வாய்ப்பு அளித்தால்தான், உம்வாழ்வு

வேர்ஊன்ற வாய்ப்பளிக்கும் ‘நீர்’

தனைநம்பி வந்தவரை வீழ்த்த நினைப்பவரின்

வாழ்வுதனை வீழ்த்தும் வினை

புழுஉண்டு மீனாகும்; மீன்உண்டு நாமாவோம்;

நாமாவோம் மீண்டும் புழு

எறும்பைப் புசிக்கும் எதுவும் இறந்தால்

அதனைப் புசிக்கும் எறும்பு

இலையை உணவாகக் கொள்ளும்ஆடு ஓர்நாள்

இலையில் உணவாகும் ஆம்

ஆடால் அழியும் செடி;மரமாய் மாறியபின்

ஓடியதன் கீழொதுங்கும் ஆடு

………

வட்டம் :

வட்டம் வரைந்து விதிக்குள் அடங்கி

முடியும் கணிதமில்லை வாழ்வு

வட்டத்துள் வாழ்ந்தாலும் விட்டத்தைத் திட்டமிட்டுக்

கட்டமைக்க வேண்டியது நீ

சிறுவட்டம் போட்டதற்குள் வாழும் குறுந்திட்டம்

தானின்று இளையோர்க்கு இலக்கு

வாழ்க்கைஓர் வட்டமென்போர், தான்வாழும் வாழ்வின்

விட்டம் அரியாதோர் தான்

==> துரைகுறள்

.

How does Karma affect a person?

See in the following GIF pic Karma affecting a person.

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்