இன்று ஒரு #ஜோதிடத் தகவல் ஜோதிடர்

  #இன்று ஒரு #ஜோதிடத் தகவல் ஜோதிடர்

 ஜோதிடம் என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தை கணிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை பல்லாயிரம் ஆண்டுகளாக உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் இதனை நம்புகின்றார்கள்.

 கோள்களும் வான் வெளியில் அவற்றின் நகர்வுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே சோதிட நூலின் அடிப்படையாகும். இதை கற்றுணர்ந்தவர்கள் ஜோதிடர்கள்.

 ஜோதிடம் என்ற வார்த்தையானது ἀστρολογία என்ற கிரேக்கப் பெயர்ச் சொல்லிருந்து பிறந்ததாகும். இதற்குக் கிரேக்க மொழியில் நட்சத்திரங்களின் கணக்கு என்று பொருளாகும். இச்சொல்லானது நட்சத்திரக் கணிப்பு என்று மாற்றமடைந்தது. இந்த கணித முறையை அறிந்தவர்கள் ஜோதிடர்கள்.

 பேசி வரும் நாலாதி பாவனாகிப்

பின்னுமொரு திரிகோணம் பாவியேற

 நேசமதா யிரண்டாதி மிதுனத் தோனும்

நிகழ்த்தெட்டுப் பனிரண்டோன் தானுங்கூடில்

 வாசமுறக் குருவுடனே சேர்ந்திட்டாலும்

மகாவித்தை தனவானாய் மகிழ்ந் தென்னாளும்

 பேசலாம் சோதிட நூல் கற்றுவாழ்வான்

பெருமையதாய் வீமகவி பேசுங்காலே .

 (இ - ள்) நாலாமிடத்ததிபதி , பாவ கிரகமாகி திரிகோணத்தில் இருக்க இடண்டாமிடத்ததிபதியும் மிதுனத்தோனாகிய புதனும் , எட்டுக்குடையோன் , பனிரண்டுக் குடையோன் சேர்ந்திட்டாலும் , குருவுடன் சேர்ந்திட்டாலும் ஜாதகன் மகாவித்தை தனவானாய் மகிழ்ந்து என்னாளும் , பேசிடுவன் , சோதிட நூல் கற்றுவாழ்வான் என்று வீமகவி பெருமையாய் கூறினார்.

இவர் பிரபலமான ஜோதிடர் பல்வேறு ஜோதிட இதழ்களில் கட்டுரைகளும் பல்வேறு ஜோதிட ஆராய்ச்சிகள் வெளியிடு செய்துள்ளார்.

#சூரியஜெயவேல் 9600607603

Comments

Popular posts from this blog

கிரகங்களின் உச்சம் & நீச்சம்

ஜோதிடத்தில் சிற்றின்பம்

லக்கினத்தில் சூரியன்