லக்கினத்தில் சூரியன் நாம் இந்த பூமியில் வாழ்வதற்கேற்ற பிரதான காரணமாக விளங்கும் சூரியன் லட்சக்ணக்கான வின் மீன்களில் ஒன்றாகும். சூரியன் இல்லையென்றால் உயிரினங்கள் இல்லை . சூரியனே ஆத்ம காரகராவார், ஜுவனுக்கும் இறைவனுக்கும் உள்ள தொடர்பைக் காட்டும் கிரகமாவார். உடல் உறுப்புக்கும் கருவுற்ற தாய்க்கு மகப்பேற்றின் போது உநவும் கிரகமாக உள்ளர். ஜோதிட சாஸ்திரத்தில் சூரியனை நைசர்கீய பாவி அல்லது அசுபன் என்றே வரையத்துள்ளனர், பெதுவாக.வே பாவியெனக் கருதப்படும் சூரியன் எல்லா லக்கினங்களுக்குமே தீய பலன்களை தருவதில்லை. நவகிரகங்களில் முதன்மையானவர். அனைவருக்கும் ஒளியை அளிக்கக்கூடியவர். சூரியனை மையமாக கொண்டே அனைத்து நவகிரகங்களும் இயங்குகின்றன. சூரியன் பற்றிய பல தகவல்களையும் நவகிரகம் என்னும் தொடர் மூலம் நாம் அறிந்தோம். இனி சூரியன் ஒவ்வொரு ராசிகளில் செயல் படுத்தும் செயல்கள் மற்றும் அவரால் ஏற்படும் பலன் பற்றி நாம் காண்போம். லக்கினத்தில் சூரியன் இருந்தால் ; தன் பங்கு தாவென்று சபையேறும் தம்பியோ சார்ந்த சன்மச்சூரியன் லக்கினத்தில் சூரியன் இருந்தால் பங்காளிச் சண்டை ஏற்பட்டும் பாகப்பிரிவினை ...
கிரகங்களின் உச்சம் & நீச்ச பங்கம் ( சிறப்பாய்வு ) உச்சம் என்பது முழு பலத்துடன் இருக்கும் நிலையை குறிப்பது. நீசம் என்பது உச்ச வீட்டிற்கு நேர் ஏழாம் வீடு. இந்நிலையில் கிரகமானது தனது முழு பலத்தையும் இழந்துவிடும். ஒரு கிரகத்தின் உயர்வு மற்றும் பலம் அதன் சிறந்த நிலையில் செயல்பட செய்யும் . ஆட்சி & உச்சம் பெறும் ராசிகள் உள்ளது, அதன் "உயர்வு" (உச்சம்) என்று அழைக்கப்படுகிறது. கிரகத்தால் ஆளப்படும் ராசிகளிலிருந்து வேறுபட்டது உச்சம் பெற்ற ராசிகள். வேத ஜோதிடத்தில் , ஒரு குறிப்பிட்ட அளவு உள்ளது, உச்ச ராசியில் ஒரு புள்ளி ஆதாவது குறிப்பிட்ட பாகை உள்ளது. இந்த உயர்ந்த புள்ளிகள் ஒவ்வொரு கிரகத்திற்கும் வேறுபட்டவை. அவற்றின் உயரத்தை ஆக்கிரமிக்கும் கிரகங்கள் முதன்மையாக வலுவானவைகள் சூரியன் 10 ° 00 'மேஷம், சந்திரன் 03 ° 00' ரிஷபம் , செவ்வாய் 28 ° 00 'மகரம், புதன் 15 ° 00' கன்னி, வியாழன் 05 ° 00 'கடகம், சுக்கிரன் 27 ° 00' மீனம், சனி 20 ° 00 'துலாம். ராகு மற்றும் கேது சில சமயங்களில் 20 ...
புத பகவானின் வாழ்கை வரலாறு புதன் ஜோதிடக் கலையில் புதனுடைய பங்கு பிரமிக்கத் தக்க தாகும் . புத பகவானை " மாலவன் ' ' என்றும் , ' புந்தி " என்றும் பெயர் சூட்டி அழைக்கின்றனர் . புதனுடைய பிறப்பு வரலாற்றை ஆராய்வேம். புராணத்தில் புதனுடைய வரலாறு படைப்புக் கடவுளான நான்முகனால் உருவாக்கபட்ட பிரம்ம ரிஷிகள் சிலரில் அத்திரி மகரிஷி ஒருவர் ஆவார் . அவர் வழியில் தோன்றிய சோமன் என்ற சந்திரன் வழி வந்த சந்திரகுல தோன்றல் தான் ' ' புதன் " என்று பெயர் சூட்டப்பட்ட வித்தியாக்காரகராவார் . புதன் , குருவின்றி தாமே அனைத்து சாஸ்திரங்களையும் கற்றறிந்தார் . ஆகவே தான் , புதனை வித்தியாக்காரகன் என்று பெயர் சூட்டி அழைக்கின்றனர் . இப்படிப்பட்ட புதனுடைய வாழ்க்கை வரலாற்றை அறிய முற்படுவோம் . சந்திரன் ஸ்ரீமன் நாராயணனுடைய அனுக்கிரகத்தைப் பெறுவதற்கு , இராஜ சுய யாகம் நடத்தினார் . அந்த யாகத் திற்கு வருகை தரும் பொருட்டு , தேவர்களுக்கும் , ரிஷிகளுக்கும் , ரிஷி புத்திரர்களுக்கும் அழைப்புகள் அனுப்பினார் . அவ்விதம் அழைப்புகள் அனுப்பியவர்களில் , தேவாதி தேவர் களுக்கெல்லாம் குருவாக விளங்கிய பிரகஸ்பதி வியா...
Comments
Post a Comment