Posts

Showing posts from March, 2021

ராசிமண்டலத்தில் சிவசக்தி !

Image
 ராசிமண்டலத்தில் சிவசக்தி !      பகல் - இரவு என்ற காலநிலை அற்ற இடமாகிய திருக்கயிலாயத்தில் பூதகணங்கள் வாழ்த்தி வரவேற்க , நந்திதேவர் புன்னகையோடு நல்வரவு கூற அடக்கமே உருவாக வந்த அகத்திய முனிவர் சிவபெருமானை வணங்கி , ஐயனே ! முத்தமிழ் வித்தகனான எந்தை கந்தவேள் அருளிய மெய்ஞான சித்தாந்தமாகிய சோதிடம் உலக மக்களுக்கு பயனுறும் வகையில் நூல் ஒன்று இயற்றியுள்ளேன் நல்லாசியருள வேண்டும் என்று விண்ணப்பித்தார் .      இதைக்கேட்ட சிவபெருமான் அகத்தியனே முத்தமிழுக்கு முதல் நூல் படைத்து பெருமை கொண்ட உன் வார்த்தைகள் எல்லாம் என் வார்த்தை என்றுதானே பொருள் நீ வழங்கப்போகும் சோதிட நூலும் உலக மக்களால் என்றென்றும் போற்றிக் கொண்டாடும் களஞ்சியமாகத் திகழட்டும் . எங்கே உன் படைப்பைக் கூறு ? என்றார் .       வான வீதியில் நவக்கிரகங்களுக்கு நாயகனான சூரிய பகவானாக விளங்கும் தாங்கள் சிங்க ராசிக்கு அதிபதியாகி வீற்றிருக்க , தனம் , வாக்கு , குடும்பம் , வித்தை , பொன் பொருள் ஆகிய இரண்டாமிடத்துக்கு ஸ்ரீமந் நாராயணன் அதிபதியாகி திகழுகின்றார் . திருமாலின் நாயகியான ஸ்ரீதேவியின் அம்சமாகிய...

ஜோதிட வாழ்வியல் விஞ்ஞானம்

Image
 ஜோதிட வாழ்வியல் விஞ்ஞானம் நீங்களும் ஆராய்ந்து பாருங்கள்    பிறந்த நேரம் மற்றும் ஒவ்வொரு கணமும் கிரக நிலை மாறிக்கொண்டே இருக்கிறது, பிறக்கும் போது எந்தவொரு தனிநபரிடமும் மிகப்பெரிய செல்வாக்கைக் கொண்டுள்ளது மற்றும் பூர்வீகம், நட்சத்திரம், சந்திரன் நின்ற ராசி அல்லது சூரியன் நின்ற ராசிகேற்ப பண்புகளையும் பலன்களையும் தறுகின்றது. இங்கு சூரியன் நின்ற வீடும் பிறந்த நேரத்திற்கன பலன்களும் கீழே தரப்பட்டுள்ளது . நீங்களும் ஆராய்ந்து பார்க்கவும்.உங்களின் அனுபவத்தை பதிவிடுங்கள்.     ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திலும் ஏற்ப மாறுகிறது  எனவே கீழே விவரிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக கிரக நிலை சில குறிப்பிட்ட பண்புகளை வழங்கும்.   05 மணி முதல் 07 மணி வரை  இந்த நேரத்தில் பிறந்தவர்களுக்கு பூர்வீகம் பிரபலமானது, சமுதாயத்தில் அறியப்பட்டவர், பொறுப்பு, செலவினம், நண்பர்களின் பெரிய வட்டம், தைரியமான, நம்பிக்கையான, பிரச்சினைகள் அல்லது தலைவலி மற்றும் தாய் போன்ற சில குணங்கள் போன்றவை.     சூரியனை பலம் பெற்றால் மேலே உள்ள பலன்கள்  உறுதியாக...

செவ்வாய் & சுக்கிரன்

Image
 செவ்வாயின் வீட்டில் சுக்கிரன்  பன்னிய சேயின் வீட்டில் பார்க்கவ னிருந்தானாகில்  பின்னிய இடமேரெண்டு பிள்ளைகள் விரையமாகும் கன்னியர் மூலந்தன்னில் கைப்பொருள் விரையமாகும் இன்னிலைதனிலே இவ்வா றிதன்பலன் அற்பமாமே .   (இ-ள்) செவ்வாயின் வீடுகளில் ஒன்றில்  மேஷம் & விருச்சிகம்  சுக்கிரன் இருந்தால் இரண்டு குழந்தைகள் பாதிப்படையும். பெண்களினால் செல்வம்,பணம் விரையமாகும். இந்த நிலையில் இருந்தால் நல்லபலன் ஏற்படது. துண்டெனும் பொருளும் பொன்னும் தோகைமூலஞ்சேதமாகும் பிண்டிய வெள்ளிதன்னை வெய்யவன் சேர்ந்தாராகில் கொண்டதோர் பொருள்கேடாகும் கூடிய தொழிலுமாறும்  அண்டிய தோஷம்வேந்தர் அலைச்சலும் மிகவுண்டாமே .    (இ-ள்)  பொன் & பொருட்களும் பெண்கள் மூலமாக சேதமாகும். சுக்கிரனுடன் சூரியன் சேர்ந்தால் பொருள் நஷ்டம், தொழிலும் அடிக்கடி மாறும். உடன் இருப்பவர்களால் பாதிப்பும், அரசு வகையில் நுண்பம். அதிக அலைச்சல் ஏற்படுத்தும். சூரியஜெயவேல் 9600607603

கோச்சாரம்

Image
 பஞ்ச அங்க இயல் ! ( கோச்சாரம் )   நட்சத்திர சுபாசுபம் , கிரகங்களின் தன்மை , கிரகங்களின் காரகபலம் உச்ச நீச்ச ஆட்சிபலம் , ஆதிபத்திய பலம் ஆகியவற்றின் அடிப்படையில் தான் கோச்சார பல நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும் .  காலற்றன வுடலற்றன தலையற்றன நாளிற்  காலக்குய மடவார்தமைக் கூடின் மலடாவார்  மாலுக்கொரு மனைமாளிகை கோலினது பாழாம்  ஞாலத்தவர் வழிபோகினு நலமெய்திடா ரவமே !  காலற்ற நாள் - கார்த்திகை , உத்திரம் , உத்திராடம் ,  உடலற்ற நாள் - மிருகசீரிஷம் , சித்திரை , அவிட்டம் ,  தலையற்ற நாள் - புனர்பூசம் , விசாகம் , பூரட்டாதி  சூரியன் : 1 வியாதி ,2 கவலை  3 நன்மை செத்துருபயம் ,  5 .நோய் , தெனலாபம் , சஞ்சலம் , வியாதி , 9 . அச்சம் , 10 தனலாபம் , 11 தன்மை 12 பொருள் விரயம்  சூரியன் ஆட்சி , உச்சம் , நீச்சபங்கம் பெற்றால்  மாறுபட்ட பலனை ஏற்படுத்தும்    சந்திரன் : 1 உடல் ஆரோக்கியம் , 2 பொருள் விரயம் ,3 தனலாபம் , 4 நோய் அச்சம் , 5 காரிய தடை,  6 மேகிழ்ச்சி சௌக்கியம்  7 காரியதடை , 9 தாமதம்,  10 நன்மை , 11 எதிர்பார்த்...

கதிர் வெள்ளி யோகம்

Image
 கதிர் வெள்ளி யோகம் ( சூரியன் – சுக்கிரன் சேர்க்கை ஓர் சிறப்பாய்வு)  சூரியனும் சுக்கிரனும் சேர்க்கை பெற்று 1 -2 -3 – 4 – 6 – 7 – 9 – 11 -12 – ஆம் வீடுகளில் ஒன்றில் இருந்தால் கதிர்வெள்ளி யோகம் ஏற்படும். ஜாதகர் & ஜாதகியர் வாழ்வில் ஏழ்மை,  மகிழ்ச்சி குறைபாடும் , கணவன் & மனைவி அன்னியோன்னியம் குறையும். சம்பாத்தியம் குறையும்.  சுக்கிரன் :- ஆடம்பரம், பெண் ஆசைகள், கர்வம், கவர்ச்சியானவர் . ஆசைகள் இல்லாத ஆத்ம காரகனான சூரியனுக்கு  ஆர்வமின்மையால் சுக்கிரன் சூரியன் பகைவர்கள்  சூரியன் நெருப்பு, சுக்கிரன் நீர். நீரும் நெருப்பு வெவ்வேறு குண இயல்பை கொண்டவர்கள், அடிக்கடி உணர்ச்சி வசப்படுவர்கள். சுர்ரென்று கோபம் வரும்.            சூரியன்-சுக்கிரன் கிரக சேர்க்கை உடையவர்களுக்கு ஆடம்பரப்  பொருட்கள் விற்பனை, சூதாட்டம், விளையாட்டு, வேடிக்கை, வினோதம் தொடர்புடையவைகளில் ஈடுபாடு ஏற்படும். தாமத திருமணம், திருமண வாழ்க்கையில் சஞ்சலம் ஏற்படுகிறது. காரணம் என்னவென்றால், களத்திரக்காரகன் சுக்கிரன்திருமணம் தாமதம் (அ) வீண் சஞ்சலம் உண்டாக்கும்.  கத...

நவகிரக வரலாறு புதன்

Image
 புத பகவானின் வாழ்கை வரலாறு புதன் ஜோதிடக் கலையில் புதனுடைய பங்கு பிரமிக்கத் தக்க தாகும் . புத பகவானை " மாலவன் ' ' என்றும் , ' புந்தி " என்றும் பெயர் சூட்டி அழைக்கின்றனர் .  புதனுடைய பிறப்பு வரலாற்றை ஆராய்வேம்.  புராணத்தில் புதனுடைய வரலாறு படைப்புக் கடவுளான நான்முகனால் உருவாக்கபட்ட பிரம்ம ரிஷிகள் சிலரில் அத்திரி மகரிஷி ஒருவர் ஆவார் . அவர் வழியில் தோன்றிய சோமன் என்ற சந்திரன் வழி வந்த சந்திரகுல தோன்றல் தான் ' ' புதன் " என்று பெயர் சூட்டப்பட்ட வித்தியாக்காரகராவார் . புதன் , குருவின்றி தாமே அனைத்து சாஸ்திரங்களையும் கற்றறிந்தார் . ஆகவே தான் , புதனை வித்தியாக்காரகன் என்று பெயர் சூட்டி அழைக்கின்றனர் . இப்படிப்பட்ட புதனுடைய வாழ்க்கை வரலாற்றை அறிய முற்படுவோம் . சந்திரன் ஸ்ரீமன் நாராயணனுடைய அனுக்கிரகத்தைப் பெறுவதற்கு , இராஜ சுய யாகம் நடத்தினார் . அந்த யாகத் திற்கு வருகை தரும் பொருட்டு , தேவர்களுக்கும் , ரிஷிகளுக்கும் , ரிஷி புத்திரர்களுக்கும் அழைப்புகள் அனுப்பினார் . அவ்விதம் அழைப்புகள் அனுப்பியவர்களில் , தேவாதி தேவர் களுக்கெல்லாம் குருவாக விளங்கிய பிரகஸ்பதி விய...

வசுமதி யோகம்

Image
 வசுமதி யோகம்  உபசெயம் மூன்று ஆறு பத்து பதினோராம் இடங்கள் உபசெயமென்பதற்கு ஒன்றை பல மடங்கில் பெருக்கும் என்று பொருள் . உபசயத்தில் கிரகங்கள் பலமுடன் இருந்தால் சிறப்பான வசுமதி யோகம் அமையும் .  " அரசே மூன்றிலிரைந்திலாறிலிருக்கச் சென்மாதி  குரசாய் நல்லோர் தனைப்பார்க்க செகத்துக் கதிபனாகுமின் "      (இ-ள்) ஜெனன லக்கினாதிபதி 3,6,10 ல் சுபக்கிரகங்களுடன் இருந்தாலும் லக்கினாதிபதியை பக்கிரகங்கள் பார்த்தாலும் பூவுலகிற்கே அதிபதியாக விளங்குவான் .  "பத்ருதிய சக்ஷடலாயே ஷிஸ்கிதாச்சேத் க்ருஏகேசரோ  ஜாதஸ்ய யோகோ பாக்யஸ்ய வக்தவ் யஸ்ஸுரிஸ்ததா "     (இ-ள்) தீய கிரகங்கள் 3,6,10,11 ல் 3,6 , ம் இடங்கள் மறைவு ஸ்தானங்கள் ஆகும் .    10 ஆம் இடம் கேந்திரம் 11 ஆம் இடம் பணபரம் எனப்படும் . 3 ஆம் இடம் தைரிய பாவமாகையால் தைரிய வீரியம் வெற்றி புகழ் கிட்டும் . 6 ஆம் இடம் எதிரி , கடன் , நோய்கள் பிரச்சனைகளைக் குறிக்கும் . 10 ஆம் இடம் தொழில் , கௌரவம் அந்தஸ்து புகழ் தரும் . 11 ஆம் இடம் லாபஸ்தானாம் . அனைத்து வகையிலும் வரும் லாபத்தை குறிக்கும் .    ...

பூர்வ புண்ணியம் & புத்திர பாக்கியம்

Image
 பூர்வ புண்ணியம் சிறந்த மனத்திறனா?  புத்திரபாக்கியமா  ? ஏழு பிறப்பும் தீயனை தீண்டா பழிபிறங்கா  பண்புடை மக்கள் பெறின் .               மனிதனின் விதி நமது மனோபலத்தால் தீர்மானிக்கப்படுகிறது . மனிதப்பிறப்போ , இல்லை வேறு உயிர்களின் பிறப்புகள் ஒரு உயிரின் பயணத்தில் அது தன் செயல்களால் தீர்மானித்துக் கொள்கிறது .அது பஞ்ச பூதங்களும் ( நீர்-நிலம்-நெருப்பு , ஆகாயம்-காற்று சம அளவில் ஒன்றுபட்டு நிற்கும் போது ஒருவித ஜீவசக்தி உருவாகின்றது .இதுதான் உயிர் .       இதில் ஒன்று விடுபட்டாலும் மற்றவை செய்லிழந்து விட்டால் ஜீவசக்தி மறைந்துவிடும் . நமது முன் வினைக்கு ஏற்ப பஞ்ச பூதங்களின் கலவைகளில் உருவாக்கப்படுகிறோம் . இதில் நாம் செய்யும் நற்செயலை நல்வினை என்றும் , தீய செயலை தீயவினை என்று குறிப்பிடுகிறோம் . அவை எந்த வினையாக இருந்தாலும் அது அதற்குரிய பலனை தராமல் அது நம்மை விடுவதேயில்லை என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் .       ஒரு மனிதன் தன் சித்தத்தால் செய்யும் இச்செயல் அவனுக்குள்ளேயே பதிவாகிறது . அந்த பதிவுகள் அதிகரிக்க அதி...

நவகிரக புரணம் செவ்வாய் பகவான்

Image
 நவக்கிரக புரணம்  செவ்வாய் பகவான்  அங்காரகன் என்ற செவ்வாாய் ஜோதிட சாஸ்்திரத்தில் செவ்வாயின் பங்கு மிகமிக இன்றியமையாதது என்றால் ஒரு போதும் தவறாகாது . அங்காரகனை ' மங்களன் ' என்றும் , ' செவ்வாய் ' என்றும் காரணபெயர் சூட்டி அழைக்கின்றனர் . அங்காரகனுடைய பிறந்த வாழ்கையின் நிலையை ஆராய்வேம்.  புராணங்களில் அங்காரகனின் வரலாறு நாம் பன்னிரெண்டு மணி நேரத்தைக் கடந்தால் ஒரு பகல் நேரத்தைக் கழிக்கின்றோம் . அதைப்போல + படைப்புத் தொழிலைத் தொழிலாகக் கொண்ட பிரம்மன் 14 மனுக்களின் காலத்தைக் கழித்தால் ஒரு பகல் பொழுதைக் கழிக்கின்றார் . ஓர் மனுவின் காலம் என்பது பல லட்சக்கண ஆண்டுகளாகும் . இவ்வாறு உண்டாகும் அனேக பகல் பொழுதுகளையும் , அனேக இரவுப் பொழுதுகளையும் பிரம்ம தேவன் கழித்தார் என்று புராண வாயிலாக நாம் அறிகிறோம் . அவ்வாறு நடந்து வரும் பிரம்மாவின் பகற்பொழுதில் இப்பொழுது நாம் ஏழாவது மனுவின் காலத்தில் ( மன்வந்த ரத்தில் ) இருக்கிறோம் . இந்த மன்வந்தரத்தின் மனு " வைவசுத மனு ' ' என்று கூறப்படுகிறார் . ( பிரம்மனின் மகன் மரிசிமகரிஷி , மரிசியின் மகன் கசியபர் , கசியபரின் மகன் சூரியன் , சூரியனின...

திருமணம் நடக்கும் திசை

Image
 திருமணம் நடக்கும் திசை                ஒருவருடைய பூர்வ புண்ணிய கர்ம வினைகளுக்கு ஏற்றவாறே அவர்களின் வாழ்வில் நல்லதும் கெட்ட பலன்கள் நடைபெறும்.     ஒரு ஜாதகருக்கு திருமணம் என்றால் ஏழாம் அதிபதி , அவர் நின்ற வீட்டதிபதி, ஏழில் நின்றவர், ஏழாம் வீட்டை பார்க்கும் கிரகங்கள், நவாம்சத்தில் ஏழாம் அதிபதியின் நிலை, ஆண்களுக்கு சுக்கிரனின் & பெண்களுக்கு செவ்வாய்யின் நிலைகளை இவற்றையெல்லாம் ஆராய்ந்து முடிவு செய்கிறோம். கிரகங்களின் திசை சூரியன்   - கிழக்கு திசையின் அதிபதி இந்திரன் சந்திரன் – வடமேற்கு திசையின் அதிபதி வாயு ,  செவ்வாய் - தெற்கு திசையின் அதிபதி யமன்  புதன்  - வடக்கு திசையின் அதிபதி குபேரன்    குரு -.வடகிழக்கு திசையின் அதிபதி ஈசாணன்  சுக்கிரன்  - தென்கிழக்கு திசையின் அதிபதி அக்கி   சனி  - மேற்கு திசையின் அதிபதி வருணன்   ராகு & கேது – தென்மேற்கு திசையின் அதிபதி நிருதி சூரியன் : - ஒருவருடைய ஜாதகத்தில் ஏழாம் அதிபதி சூரியனாகில் வாழ்க்கைத்துணைவர்கள் கிழக்கு திசையிலிரு...